இந்தியா செய்தி

இமாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பாராகிளைடர் – இளம் விமானி மரணம்

  • December 28, 2025
  • 0 Comments

இமாச்சலப் பிரதேசத்தின்(Himachal Pradesh) காங்க்ரா(Kangra) மாவட்டத்தில், பாராகிளைடர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நடுவானில் சமநிலையை இழந்து விபத்துக்குள்ளானதில் அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிர் பில்லிங்(Bir Billing) பாராகிளைடிங் தளத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பிர் பில்லிங் பாராகிளைடிங் சங்கத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நடுவானில் சமநிலையை இழந்து, ஏவுதளத்திற்கு கீழே உள்ள சாலை அருகே விபத்துக்குள்ளானது. உடன் […]

உலகம் செய்தி

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் உடல்நிலை கவலைக்கிடம்

  • December 28, 2025
  • 0 Comments

வங்கதேசத்தின்(Bangladesh) முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின்(Khaleda Zia) உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார். வங்கதேச தேசியவாதக் கட்சியின்(BNP) 80 வயதான தலைவரான ஜியா, நவம்பர் 23 முதல் டாக்காவின்(Dhaka) எவர்கேர்(Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “செயற்கை சுவாசக் கருவி(ventilator) உதவியுடன் உள்ள கலிதா ஜியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது. அவர் மிகவும் முக்கியமான கட்டத்தை கடந்து வருகிறார்” என்று மருத்துவர் ஜாஹித்(Zahid ) மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் […]

உலகம்

80 ஆண்டுகளுக்குப் பிறகு செர்பியா தலைநகரில் அகற்றப்பட்ட 470 கிலோ எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு

  • December 28, 2025
  • 0 Comments

செர்பியாவின்(Serbia) தலைநகரான பெல்கிரேடின்(Belgrade) மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்திலிருந்து 470 கிலோகிராம் எடையுள்ள இரண்டாம் உலகப் போரின் வான்வழி குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக அதகிரிகள் தெரிவித்துள்ளனர். 1944ம் ஆண்டு நாஜி(Nazi) ஆக்கிரமிப்பிலிருந்து பெல்கிரேடை விடுவித்தபோது, ​​ஜெர்மனியின்(Germany) நிலைகள் மீதான நேச நாட்டு விமானத் தாக்குதல்களின் போது அமெரிக்காவில்(America) தயாரிக்கப்பட்ட AN-M44 குண்டு பயன்படுத்தப்பட்டது. ஒரு குடியிருப்பு பகுதி மற்றும் ஒரு வர்த்தக வளாகம்(shopping mall) அருகே குண்டு காணப்பட்டதால் தீவிர கண்காணிப்புக்கு பிறகே குண்டு […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் மலையேற்றத்தின் போது காணாமல் போன பிரெஞ்சுக்காரர் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்பு

  • December 28, 2025
  • 0 Comments

கர்நாடகாவிற்கு(Karnataka) சுற்றுலாப் பயணியாகச் சென்ற பிரெஞ்சுக்காரர்(France) ஒருவர் ஹம்பியில்(Hampi) உள்ள ஒரு மலையில் ஏற முயன்றபோது வழுக்கி விழுந்து காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற பாரம்பரியத் தலமான அஷ்டபுஜ ஸ்னானா(Ashtapuja Snana) மலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சுற்றுலாப் பயணி 52 வயதான புருனோ ரோஜர்(Bruno Roger) என அடையாளம் காணப்பட்டுளளார். வழுக்கி விழுந்த பிறகு புருனோ மலையின் பின்புறம் இரண்டு நாட்கள் வலியால் சிக்கித் தவித்துள்ளார். பின்னர் 52 […]

உலகம் செய்தி

சோமாலிலாந்தை அங்கீகரித்த இஸ்ரேலின் நடவடிக்கைக்கு சோமாலிய ஜனாதிபதி கண்டனம்

  • December 28, 2025
  • 0 Comments

இரண்டு நாட்களுக்கு முன்பு சோமாலிலாந்தை(Somaliland) முறையாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல்(Israel) மாறியது. இந்நிலையில், பிரிந்து சென்ற சோமாலிலாந்து பகுதியை இஸ்ரேல் அங்கீகரிப்பது உலகம் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்று சோமாலிய(Somali) ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது(Hassan Sheikh Mohamud) அவசர நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும், சோமாலிலாந்தை முதன்முதலில் அங்கீகரித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்(Benjamin Netanyahu) அறிவிப்பு, சோமாலி குடியரசின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

  • December 28, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரிவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி ஜனவரி மாதம் இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்டி டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முக்கிய வீரர்களான பாபர் அசாம்(Babar Azam), ரிஸ்வான்(Rizwan), ஷாஹீன் அப்ரிடி(Shaheen Afridi) ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி – சல்மான் அலி ஆகா(Salman Ali Agha) அப்துல் சமாத்(Abdul […]

உலகம் செய்தி

குளிர்காலத்தை இலக்கு வைத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய இந்தியா

  • December 28, 2025
  • 0 Comments

குளிர்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் , ஜம்மு பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்படுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் குளிர்காலத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுறுவுவதை தடுக்க, பாதுகாப்பு படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பாதுபாப்பு படைகளின் தீவிர நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக பயங்கரவாதிகள், கிஷ்த்வார் மற்றும் தோடாவில் உள்ள உயரமான மலைப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. […]

இந்தியா செய்தி

தமிழ்மொழி உலகின் மிகவும் பழமையான மொழி – பிரதமர் மோடி

  • December 28, 2025
  • 0 Comments

தமிழ்மொழி உலகின் மிகவும் பழமையான மொழியெனவும் தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது என்றும் இந்திய பிரதமர் நரேந்தி மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இன்று தேசத்தின் பிற பாகங்களிலும் கூட குழந்தைகள் இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர், அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையின் அடையாளமானது என்றும் அவர் கூறியுள்ளார். இங்கு […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் வறுமையில் உறவினர் பராமரிப்பாளர்கள் – சோபாவில் தூங்க வேண்டிய நிலை

  • December 28, 2025
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 1,41,000 குழந்தைகள் பெற்றோர்களால் பராமரிக்க முடியாமல், உறவினர் அல்லது நண்பர் வீட்டில் வளர்க்கப்படுவதாக, கிம்ஷிப் (Kinship) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. பல உறவினர் பராமரிப்பாளர்கள் குழந்தைகளை தங்க வைக்க, தங்கள் சொந்த படுக்கையறைகளை விட்டு சோபாவில் தூங்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். இதனால் உடல் வலியும், வறுமையும் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மதிப்பீடுகளின் படி, ஒரு குழந்தையை 18 வயது வரை வளர்ப்பதற்கான செலவு £250,000 பவுண்டுகள் ஆகும், இரண்டு குழந்தைகள் […]

ஐரோப்பா செய்தி

UKவில் பெண்சிசுக்களை கருக்கலைப்பு செய்யும் இந்திய தம்பதியர்!

  • December 28, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சமீபகாலமாக கருக்கலைப்பு செய்யும் பெண்களின் வீதம் அதிகரித்து வருவதாக புதிய கணக்கெடுப்பொன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கருகலைப்பு தொடர்பில் ஆலோசனை வழங்கும் பிரித்தானிய தொண்டு நிறுவனமொன்று, பாலின ரீதியாக கருகலைப்பு செய்வது சட்டவிரோதமானது அல்ல எனக் கூறுகிறது. இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய பெண்கள் ஆண்குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு கட்டாயப்படுத்தப்படுவதாகவும், இதனால் ஸ்கேன் பரிசோதனைகளை தொடர்ந்து கருகலைப்புகளை முன்னெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. […]

error: Content is protected !!