அரசியல் இலங்கை செய்தி

கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தில் இழுபறி நிலை: பின்னணி என்ன?

  • December 29, 2025
  • 0 Comments

தமக்கு விசுவாசமான ஒருவரை கணக்காய்வாளர் நாயகம் Auditor General பதவிக்கு நியமிப்பதற்கு அரசாங்கம் முற்படவில்லை என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க Mahinda Jayasinghe தெரிவித்தார். கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரைத்திருந்தார். இந்த பரிந்துரையை அரசமைப்பு சபை நிராகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் நாட்டில் கணக்காய்வாளர் பதவிக்கு வெற்றிடம் நிலவுகின்றது. தமக்கு விசுவாசமானவரை நியமிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இழுபறி நிலையை கையாள்கின்றது […]

உலகம்

கனடாவில் வேலை வாய்ப்பில் அதிகரித்த சலுகைகள் – புதிய வேலைகளை தேடும் மக்கள்!

  • December 29, 2025
  • 0 Comments

கனடாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் வரும் ஆண்டில் புதிய வேலையைத் தேடத் திட்டமிட்டுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சுமார் 2000  வேலை செய்யும் அல்லது வேலை தேடும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில், பதிலளித்தவர்களில் மூன்றில் ஒருவர் ஆண்டின் முதல் பாதியில் வேலைகளை மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இது ஜூலை 2025 உடன் ஒப்பிடும்போது 07 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வை நடத்திய ரோபர்ட் ஹாஃப் (Robert Half) நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

உலகம் செய்தி

ஈரானுக்கு கைக்கொடுத்த ரஷ்யா : வெற்றிகரமாக ஏவப்பட்ட செயற்கைக்கோள்!

  • December 29, 2025
  • 0 Comments

ரஷ்யா 03 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. பயா (Paya), கோவ்சர் (Kowsar) மற்றும் ஜாஃபர்-2 (Zafar-2) என அழைக்கப்படும் மூன்று ஈரானிய செயற்கைக் கோள்கள் நேற்று கிழக்கு ரஷ்யாவில் உள்ள வோஸ்டோக்னி (Vostochny) ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில் பயா (Paya) என அழைக்கப்படும் செயற்கைக்கோள் ஈரான் இதுவரை விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களில் முதன்மையானது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்கள் 3 மீட்டர் தெளிவுத்திறன் கொண்ட படங்களைக் கொண்டுள்ளதாகவும், அவை நீர்வளம், […]

அரசியல் இலங்கை செய்தி

எதிரணி ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது!

  • December 29, 2025
  • 0 Comments

ஊடக நிறுவனங்கள்மீது தாக்குதல் நடத்தி அவற்றை கொளுத்தியவர்கள், இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது “சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Sundaralingam Pradeep தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடக அடக்குமுறையைக் கையாள்வதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு. “ கடந்த காலங்களில் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். […]

உலகம் செய்தி

காசாவில் வெள்ளத்தில் மிதக்கும் கூடாரங்கள் – 12 பேர் உயிரிழப்பு!

  • December 29, 2025
  • 0 Comments

காசாவில் நிலவும் தொடர் மழை மற்றும் சீரற்ற வானிலையின் காரணமாக ஏறக்குறைய 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக கூடாரங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், இதனால் மக்கள் பல்வேறு சுகாதார அபாயங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டிடங்களில் தங்க வேண்டாம் என்று அவசரகால ஊழியர்கள் மக்களை எச்சரித்துள்ளனர். இருப்பினும் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவில் மக்கள் தங்குவதற்கு பாதுகாப்பான சில இடங்களே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காசாவில் கிட்டத்தட்ட 80% கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது சேதமடைந்துள்ளன என்று […]

உலகம் செய்தி

மெக்சிகோவில் சோகம் – 13 பேரின் உயிரை பறித்த ரயில் விபத்து!

  • December 29, 2025
  • 0 Comments

தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏறக்குறைய   100 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்சிகன் கடற்படையின் கூற்றுப்படி, ஓக்ஸாகா (Oaxaca) மாநிலத்தில் உள்ள டெஹுவான்டெபெக் (Tehuantepec) ரயில்வேயின் இஸ்த்மஸின்(Isthmus) லைன் Z இல் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த ரயில் 250 பேர் பயணம் செய்த நிலையில் அவர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 98 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

ஊடகங்கள்மீது கை வைத்தால் என்.பி.பி. அரசாங்கத்தின் கதை முடியும்!

  • December 29, 2025
  • 0 Comments

ஊடகங்கள்மீது கைவைக்க முற்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணாமல்போக நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJP) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S.M. Marikar) எச்சரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஊடக நிறுவனங்கள் தவறிழைத்தால் , தவறான செய்திகளை வெளியிட்டால் அதற்கு எதிராக சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஊடகத்துறை அமைச்சில் முறைப்பாடும் […]

உலகம் செய்தி

ஆளும் கட்சி மாநாட்டிற்கு தயாராகும் வடகொரியா – கப்பல் ஏவுகணை சோதனை!

  • December 29, 2025
  • 0 Comments

வடகொரியா இன்று நீண்ட தூர மூலோபாய கப்பல் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை நிர்மாணிப்பதில் வெளிப்படையான முன்னேற்றத்தைக் காட்டிய சில நாட்களுக்கு பிறகு இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளும் கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதில் வடகொரியா கரிசனை காட்டி வருகிறது. இதற்கிடையே  வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுடனான உறவுகளில் புதிய […]

அரசியல் செய்தி

உறுதிமொழிகள் காற்றில்: என்.பி.பி. அரசுக்கு ராதா எம்.பி. எச்சரிக்கை!

  • December 29, 2025
  • 0 Comments

“மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கான செல்வாக்கு குறைவடைந்துவருகின்றது.” – என்று மலையக மக்கள் முன்ணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. Radhakrishnan MP தெரிவித்தார். இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்ற நினைப்பில் இருக்காது, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு NPP அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வலுவாக உள்ளது. எனினும், வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அரசாங்கம்மீதான நம்பிக்கை குறைவடைந்துவருகின்றது. எனவே, உறுதிமொழிகளை நிறைவேற்றினால்தான் […]

அரசியல் உலகம் செய்தி

போர் முடிவுக்கு வரும் சாத்தியம்: அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் ஏற்பு!

  • December 29, 2025
  • 0 Comments

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். 20 அம்சங்கள் அடங்கிய அமைதித் திட்டத்தில் 90 சதவீதம் ஏற்கப்பட்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கூறினார். அமெரிக்காவின் புளோரிடா Florida மாகாணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை அந்நாட்டு நேரப்படி இன்று (29) அதிகாலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது அமைதித் திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதியை […]

error: Content is protected !!