ஐரோப்பா

கொட்டித்தீர்க்கும் பனி : மின்வெட்டு மற்றும் உயிராபத்து குறித்து பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • January 2, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்தின் (Scotland) சில பகுதிகளில் பனிப்பொழிவு வானிலைக்கான அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்றைய தினம் 40செ.மீ வரை பனிப்பொழிவு இருக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கு ஸ்காட்லாந்திற்கான அம்பர் எச்சரிக்கை இன்று முதல் நாளை நண்பகல் வரை அமுலில் இருக்கும் என வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பயண குழப்பம், மின்வெட்டு மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் ஆரம்பம் முதல்  இந்த மாதம் முழுவதும் பனிப்பொழிவு மற்றம் […]

உலகம்

அமெரிக்காவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் : அதிகரிக்கும் மரணங்கள்!

  • January 2, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் காய்ச்சல் காரணமாக இதுவரை 09 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஹியோ (Ohio) மற்றும் கென்டக்கி (Kentucky) மாநிலங்களில் முதல் குழந்தை இறப்புகள் பதிவாகியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கென்டக்கியில்  (Kentucky)  இறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு மாநிலங்களிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் காய்ச்சல் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்த பருவத்தில் நாடு முழுவதும் 7.5 மில்லியன் காய்ச்சல் தொற்றாளர்கள் 81,000 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.  அத்துடன் 3,100 […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியும் வலியுறுத்து!

  • January 2, 2026
  • 0 Comments

“தமக்கு மக்கள் ஆதரவு உள்ளதெனக் கூறும் அரசாங்கம், முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாண்டில் இந்த சவாலை விடுக்கின்றோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலை […]

அரசியல் இலங்கை செய்தி

ரணிலிடமிருந்து சஜித்துக்கு பறந்த அழைப்பு: அரசியல் களத்தில் நடக்க போவது என்ன?

  • January 2, 2026
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் Sajith Premadasa முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சஜித் பிரேமதாசவை, நேற்று (01) தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அரசியல் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை சஜித் பிரேமதாச உருவாக்கியதில் இருந்து அவருக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் உறவில் முறிவு ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதி […]

உலகம்

ஈரானில் 05ஆவது நாளாக தொடரும் போராட்டம் – முடியாட்சியை மீள கோரும் மக்கள்!

  • January 2, 2026
  • 0 Comments

ஈரானில் வாழ்க்கைச் செலவு  அதிகரித்து வருகின்றமையால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் விளைவாக பலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் (Lordegan) நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அஸ்னாவில் (Azna) மேலும் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் (Kouhdasht) ஒருவர் கொல்லப்பட்டதாகவும்  ஃபார்ஸ் (Fars) செய்தி வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களின் போது கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றன. நாட்டின் […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸ், பிள்ளையான் சிறையில் வாடுவது வலிக்கிறது: மஹிந்த அணி கவலை!

  • January 2, 2026
  • 0 Comments

” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டினார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். “இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் இன்று மறக்கப்பட்டுள்ளனர். உயிரை பணயம் […]

இலங்கை செய்தி

இலங்கை, பங்களாதேஸ் இரு தரப்பு உறவை வலுப்படுத்த திட்டம்!

  • January 2, 2026
  • 0 Comments

பங்களாதேஸ் இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசகர் முகமது Mohammad Yunus யூனுஸை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்டா சென்றிருந்தார். இவ்விஜயத்தின்போதே மேற்படி சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக பங்களாதேஸ் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்தார். இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் 2026 முதல் பாடசாலை நேரத்தில் மாற்றமா?

  • January 2, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீடிக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு என்பன வழமைக்கு திரும்பும்வரை வழமையான நேரப்படியே பாடசாலை நடைபெறும். கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டில் 5-13 ஆம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாறாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் […]

#SwitzerlandFire #CransMontana #Switzerland #BreakingNews #SkiResortFire #Valais #StephaneGanzer #NewYearTragedy2026 ஐரோப்பா

சுவிட்சர்லாந்து விபத்து: தீப்பிழம்புகளால் உருவான திடீர் வெடிப்பு – பாதுகாப்பு அதிகாரி புதிய தகவல்.

  • January 2, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana ) நகரில் உள்ள ‘லே கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற மதுபான விடுதியில் (Bar), ஜனவரி 1, 2026 அன்று அதிகாலை சுமார் 1:30 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. புத்தாண்டைக் கொண்டாட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து சுவிட்சர்லாந்து வரலாற்றிலேயே மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விபத்தில் சுமார் […]

உலகம் செய்தி

நைஜீரியாவில் பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் கார் விபத்து – ஓட்டுநர் கைது

  • January 1, 2026
  • 0 Comments

நைஜீரியாவில்(Nigeria) ஒரு பயங்கர விபத்தில் சிக்கிய பிரிட்டிஷ்(British) குத்துச்சண்டை வீரர் ஆந்தனி ஜோசுவா(Anthony Joshua) சென்ற காரின் ஓட்டுநர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். லாகோஸ் – இபாடன்(Lagos-Ibadan) அதிவேக நெடுஞ்சாலையின் மாகுன்(Makun) பகுதியில் அவர் பயணித்த லெக்ஸஸ்(Lexus) ரக சொகுசு கார் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது காரில் பயணித்த ஆந்தனி ஜோசுவாவின் இரண்டு நண்பர்களான லத்தீஃப் அயோடெல்(Latif Ayodele) மற்றும் சினா […]

error: Content is protected !!