இலங்கை

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ. ஸ்ரீபதி பதவியேற்பு!!

  • January 5, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபராக (காணி)  ஜெ. ஸ்ரீபதி  இன்று (05) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை  பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார கலந்துகொண்டு, புதிய மேலதிக அரசாங்க அதிபருக்கு (காணி) வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 […]

அரசியல் இலங்கை செய்தி

பதவி விலகுவாரா பிரதமர்? வெளியானது அறிவிப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  Dr. Harini Amarasuriya பதவி விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் எழவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர Devananda Suraweera தெரிவித்தார். கல்வி கட்டமைப்பை சீர்குலைத்துள்ள பிரதமர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுங்கட்சி எம்.பியான தேவானந்த சுரவீர மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாட்டுக்கு, […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

வெடுக்குநாறிமலை நிலத்தை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அவசர கடிதம்

  • January 5, 2026
  • 0 Comments

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான நிலம் மற்றும் பாதையை உடனடியாக விடுவித்துத் தருமாறு வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் இன்று ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். வரலாற்றுத் தொன்மை மிக்க இந்த ஆலயத்தின் வழிபாட்டுச் செயற்பாடுகளுக்காக, ஒரு ஏக்கர் காணியினை விடுவித்துத் தருமாறு ஆலய அறங்காவலர் சபையினர் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். […]

ஐரோப்பா

போலித் தகவல்கள் – 03 வயதிற்கு உட்பட குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஐரோப்பிய நாடு!

  • January 5, 2026
  • 0 Comments

பின்லாந்தில் போலிச் செய்திகள் மற்றும் தகவல்களை கண்டறிவது தொடர்பில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் செயற்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. 03 வயதுக்குட்பட்ட  குழந்தைகள் தொடங்கி அனைவருக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த நீண்டகால கல்வி அணுகுமுறை, ஊடகங்களை பகுப்பாய்வு செய்வதற்கும் தவறான தகவல்களை அடையாளம் காண்பதற்கும் மாணவர்கள் மத்தியில் அறிவு திறனை வளர்க்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில், கல்வியாளர்கள் இப்போது தங்கள் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாக […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் சகா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது: பின்னணி என்ன?

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ Johnston Fernando இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் FCID அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று எப்.சி.ஐ.டிக்கு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வரவழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் […]

ஐரோப்பா

பிரிஜிட் மக்ரோன் தொடர்பில் அவதூறு கருத்துக்கள் – வழக்கு விசாரணை இன்று!

  • January 5, 2026
  • 0 Comments

பிரான்ஸின் முதன் பெண்மணியான பிரிஜிட் மக்ரோன் தொடர்பில்  ( Brigitte Macron) இணையவழியில் தவறான தகவல்களை பரப்பிய  10 குற்றவாளிகளுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. குற்றவாளிகள் பிரிஜிட் மக்ரோனின்  பாலினம் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக  தவறான தகவல்களை பரப்பியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் 41 தொடக்கம் 60 வயதுடைய எட்டு ஆண்களும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கு  கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. […]

அரசியல் இலங்கை செய்தி

அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று போராட்டம்!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (05) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியாலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என சமூகவலைத்தள பிரச்சாரமொன்றில் மேற்படி கட்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்துமாறும், இலத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்துமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் இருந்து பிரிந்து சென்ற குழுவினராலேயே முன்னிலை சோசலிசக் கட்சி […]

உலகம்

வெனிசுலாவின் புதிய அரசாங்கத்தை எச்சரிக்கும் ட்ரம்ப் – மீண்டும் ஒரு தாக்குதலுக்கும் தயார்!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு தற்போது அமெரிக்காவின் பிடியில் உள்ள நிலையில், ட்ரம்ப் மேலும் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். வெனிசுலா அதன் எண்ணெய் தொழில் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால் மேலும் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார். வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு முரணாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்தே ட்ரம்ப் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: போக்குவரத்து மற்றும் கல்வி பாதிப்பு

  • January 5, 2026
  • 0 Comments

கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில் கடும் பனிப்பொழிவுக்கான ‘ஆம்பர்’ (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அபெர்டீன் (Aberdeen) மற்றும் ஷெட்லாந்து (Shetland) பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, வீதிகள் அபாயகரமாக இருப்பதால் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கடும் குளிர் காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நலனில் அதிக […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலையின்மை அதிகரிக்கும் அபாயம்: ஆய்வில் எச்சரிக்கை

  • January 5, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 2026-ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் பாரியளவில் அதிகரிக்கும் என ‘ரெசல்யூஷன் ஃபவுண்டேஷன்’ (Resolution Foundation) நிறுவனத்தின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், எரிசக்தி விலையேற்றம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஆகிய “மும்முனைத் தாக்குதல்களை” (Triple Whammy) எதிர்கொள்ள முடியாமல் திணறும் “ஸோம்பி” (Zombie) நிறுவனங்களின் வீழ்ச்சியே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளாகக் குறைந்த வருவாயில் இயங்கி வந்த இத்தகைய நிறுவனங்கள், தற்போதைய தொழில் செலவீனங்களைச் […]

error: Content is protected !!