ஐரோப்பா செய்தி

வேல்ஸில் அனுமதியின்றி ரோயல் கடற்படை சீருடை அணிந்தவர் கைது

  • January 5, 2026
  • 0 Comments

வடக்கு வேல்ஸில் நினைவு நிகழ்வொன்றில் அனுமதியின்றி ரோயல் கடற்படையின் உயர் அதிகாரியாக உடை அணிந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். க்வினெட்டில் (Gwynedd) இல் உள்ள ஹார்லெச்சை (Harlech) சேர்ந்த 65 வயதான ஜோனாதன் கார்லி [Jonathan Carley] அனுமதியின்றி ரோயல் கடற்படையின் சீருடை மற்றும் பதக்கங்களுடன் ஆடை அணிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் அவரது படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, வடக்கு வேல்ஸில் உள்ள லாண்டுட்னோ [Llandudno] வில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இந்த […]

இலங்கை செய்தி

2025 உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை

  • January 5, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நாளை நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் […]

உலகம் செய்தி

கிழக்கு காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தீவிரம்

  • January 5, 2026
  • 0 Comments

கிழக்கு காசாவில், இஸ்ரேலிய இராணுவம் கடந்த 24 மணிநேரமாக தனது கட்டுப்பாட்டு பகுதியை விரிவுபடுத்தி வருவதாக அல் ஜசீரா செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முக்கியமான சலா அல்-தின்வீதி [Salah al-Din Road]க்கு அருகே தங்கியிருந்த பல இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசா மீது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிப்பதால், தற்போது காசா பகுதியின் 50 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதாக […]

உலகம் செய்தி

பொருளாதார நெருக்கடியால் ஈரானில் போராட்டங்கள் தீவிரம்

  • January 5, 2026
  • 0 Comments

ஈரானின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை எதிர்த்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வெளியான வீடியோக்களில், தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. கடந்த வாரத்திலிருந்து நாட்டின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களில் போராட்டங்கள் நடந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 19 போராட்டக்காரர்களும், ஒரு பாதுகாப்புப் படை உறுப்பினரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், ஈரானிய அதிகாரிகள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் […]

ஐரோப்பா செய்தி

வெனிசுலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள  சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04 ஆண்டுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும்,  சட்டவிரோத சொத்துக்கள் வெளியேறுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து முடக்கம் தற்போதைய வெனிசுலா அரசாங்கத்தின் உறுப்பினர்களைப் பாதிக்காது எனத் தெரிவித்துள்ளதுடன்,  வெனிசுலா மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சில நிதிகளை திருப்பி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வெனிசுலாவின் நிலைமை நிலையற்றது […]

அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக்கட்சி மீண்டெழும்: கடமையேற்ற கையோடு சாமர சூளுரை!

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) நிச்சயம் மீண்டெழும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் தயநாயக்க எம்.பி. Chamara Sampath Dayanayake தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட அவர், இன்று (05) கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். “ ஜே.வி.பியானது 3 உறுப்பினர்களை வைத்துக்கொண்டுதான் ஆட்சியை பிடித்தது. ஏற்ற, இறக்கங்களை அக்கட்சி சந்தித்தது. இன்று 159 எம்.பிக்கள் இருக்கின்றனர். எனவே, ஸ்ரீலங்கா […]

அரசியல் இலங்கை கல்வி

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, இளைய மகனுக்கு மறியல்!

  • January 5, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட இருவரும், வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சதொசவுக்குரிய லொறியொன்றை முறைகேடாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மூத்த மகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, […]

உலகம்

அமெரிக்க துணை ஜனாதிபதியின் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் வீட்டில் இன்று காலை மர்ம நபர் ஒருவர்  பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ரகசிய சேவை அதிகாலை 12:15 மணிக்கு காவல்துறையை தொடர்பு கொண்டு இது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து காவலில் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் டிரைவில் (William Howard Taft Drive) அமைந்துள்ள வான்ஸின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலதிக […]

ஐரோப்பா செய்தி

கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க் – கிரீன்லாந்து மட்டுமே தீர்மானிக்க வேண்டும்

  • January 5, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தின் எதிர்காலத்தை கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு தேவையென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து பிரதமரின் கருத்து வெளியாகியுள்ளது. அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், அரை தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைக்கலாம் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இந்த யோசனைக்கு கிரீன்லாந்தின் பிரதமரும் டென்மார்க்கின் பிரதமரும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு – ஓடுப்பாதையை மூடிய விமான நிலையம்!

  • January 5, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான நிலையம் ஒன்றின் ஓடுபாதை இன்று காலை மூடப்பட்டது. லிவர்பூல் ஜான் லெனான் (Liverpool John Lennon) விமான நிலையத்தின் ஓடுப்பாதையே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் திட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்கள் தற்போது  பனிக்கட்டிகளை அகற்ற முயற்சித்து வருவதாகவும்,  கூடிய விரைவில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக […]

error: Content is protected !!