அரசியல் இலங்கை செய்தி

வெனிசுலா விவகாரம்: ஐ.நாவிடம் இலங்கை விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. சபை, பாதுகாப்பு சபை என்பவற்றிடமே இலங்கை இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. வெனிசுலா விவகாரம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வெனிசுலா நிலைவரம் தொடர்பில் இலங்கை அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் நாடுகளின் […]

உலகம் செய்தி

ஜப்பானில் நில அதிர்வு

  • January 6, 2026
  • 0 Comments

ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள ஷிமானே (Shimane) மாகாணத்தில் இன்று (ஜனவரி 6) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10.18 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.2 மெக்னிடியூட் (Magnitude) அளவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே டோட்டோரி, சுகோகு உள்ளிட்ட அண்டை மாகாணங்களிலும் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. முதலாவது நில அதிர்வைத் தொடர்ந்து, சரியாக காலை 10.30 மணியளவில் யசுகி (Yasugi) பகுதியில் 5.1 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் […]

இலங்கை

இலங்கைக்கு மீள வர ஆசைப்படும் புலம்பெயர் தமிழர்கள்!

  • January 6, 2026
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற குடும்பம் ஒன்று தங்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் ஆட்சியரின் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேற்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சரிவைத் தொடர்ந்து, மார்ச் 2022 முதல் கடல் வழியாக 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக தப்பிச் சென்றிருந்தனர். தமிழக அரசு அவர்களை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து, உணவு மற்றும் […]

உலகம்

வெனிசுலாவில் அதிகரிக்கும் பதற்றம் – ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மத்திய கராகஸில் உள்ள மிராஃப்ளோரஸ் (Miraflores) அரண்மனையின் மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததாகவும், இரவு 8 மணியளவில் பாதுகாப்புப் படையினர் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் மதுரோவை வீழ்த்த அமெரிக்க படைகள் முன்னெடுத்த தாக்குதல்  போன்று வலுவாக இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பிறகு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை: வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

  • January 6, 2026
  • 0 Comments

வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களைக் கையாள்வதற்கான புதிய நடைமுறைத் தரநிலைகளை (SOP) அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கை இறுதி செய்யும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சீன ஆராய்ச்சி கப்பல்களின் வருகைக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இவ்வாறான கப்பல்களை அனுமதிப்பதில் நிலவும் இராஜதந்திர மற்றும் பூகோல அரசியல் சவால்களைக் கருத்திற்கொண்டு இந்த விசேட நடைமுறை வகுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடகாலமாக அமுலில் இருந்த ஆராய்ச்சி கப்பல்களுக்கான தடை அண்மையில் […]

உலகம் செய்தி

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!

  • January 6, 2026
  • 0 Comments

உக்ரைன்மீதான சட்டவிரோத போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆஸ்திரேலியா, உக்ரைனுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடல் நேற்று இடம்பெற்றது. இதன்போது சிட்னி, போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்தார். மேற்படி தாக்குதலில் உயிரிழந்த 15 பேரில் அறுவர், உக்ரைன் வம்சாவளி ஆஸ்திரேலியர்களாவர். அதேவேளை ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் […]

அரசியல் இலங்கை செய்தி

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு!!

  • January 6, 2026
  • 0 Comments

நாடாளுமன்றம் இன்று (6) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை நடைபெறும். இதன்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. குறிப்பாக அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக்கொள்வதற்குரிய விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் யோசனையும் முன்வைக்கப்படவுள்ளது. மேலும் சமகால அரசியல் தொடர்பிலும் […]

பொழுதுபோக்கு

அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஜாக்பாட்! ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் குறித்த மாஸ் அப்டேட்!

  • January 5, 2026
  • 0 Comments

தமிழ் திரையுலகில் அஜித் குமாரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்த திரைப்படம் ‘மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படம், அஜித்தின் 50-வது படமாக வெளியாகி பிளாக்பூஸ்டர் வெற்றியைப் பெற்றது. தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வரும் நிலையில், அஜித்தின் இந்த ‘கல்ட் கிளாசிக் (Cult Classic)’ திரைப்படம் மீண்டும் திரையரங்கிற்கு வரவுள்ளது. வரும் ஜனவரி 23-ம் தேதி முதல் ‘மங்காத்தா’ திரைப்படம் தமிழகம் […]

உலகம் செய்தி

வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியுடன் பிரேசில் ஜனாதிபதி தொலைபேசி பேச்சுவார்த்தை

  • January 5, 2026
  • 0 Comments

தென் அமெரிக்க நாட்டை அமெரிக்கா தாக்கி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை(Nicolas Maduro) பதவி நீக்கம் செய்த பின்னர், பிரேசில்(Brazil) ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா(Luiz Inacio Lula da Silva) வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸுடன்(Delcy Rodriguez) ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் போது அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத எல்லையை தாண்டியதாக லூலா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு குறித்து பிரேசில் ஜனாதிபதி அலுவலகம் கூடுதல் […]

பொழுதுபோக்கு

ரெட் கார்டு வாங்கிய விஜே பார்வதி – வைரல் வீடியோவின் உண்மை என்ன?

  • January 5, 2026
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டில் நடந்த ஒரு வன்முறைச் சம்பவம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 90 நாட்கள் வரை டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இறுதிச்சுற்றுக்குச் செல்லும் ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சான்ட்ராவுக்கும், விஜே பார்வதி மற்றும் கம்ருதீனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த […]

error: Content is protected !!