உலகம் செய்தி

1,13,000 பேரைக் கொல்லும் போதைப்பொருளுடன் அமெரிக்காவில் பிடிபட்ட இரண்டு இந்தியர்கள்

  • January 8, 2026
  • 0 Comments

7 மில்லியன் டாலர் மதிப்புள்ள 309 பவுண்டுகள் கோகைனை கடத்தியதற்காக இரண்டு இந்திய லாரி ஓட்டுநர்கள் இந்தியானாவில்(Indiana) கைது செய்யப்பட்டுள்ளனர். 25 வயதான குர்பிரீத் சிங்(Gurpreet Singh) மற்றும் 30 வயதான ஜஸ்வீர் சிங்(Jasvir Singh) ஆகியோர் முறையே 2017 மற்றும் 2023ம் ஆண்டுகளில் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். முக்கிய நெடுஞ்சாலை நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் ​​சுமார் “113,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொல்ல போதுமானது” என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை(DHS) தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் […]

இந்தியா செய்தி

இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்

  • January 8, 2026
  • 0 Comments

இமாச்சலப் பிரதேச(Himachal Pradesh) உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. நீதிமன்ற அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, நாய் தடுப்புப் பிரிவு மற்றும் காவல்துறையினர் நீதிமன்றத்தை அடைந்தனர். இருப்பினும், நீதிமன்ற வளாகத்திற்குள் எந்த வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் – ஸ்டாலின்

  • January 8, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்று டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற Umagine TN-2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார். தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமான கருவி இல்லை, எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் […]

இந்தியா தமிழ்நாடு

தமிழகத்தின் மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி

  • January 8, 2026
  • 0 Comments

தமிழகத்தின் மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நீதிபதிகள் கடற்கரையை நேரில் ஆய்வும் செய்ததாக கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க […]

உலகம் செய்தி

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஜார்க்கண்ட் முதல்வர்

  • January 8, 2026
  • 0 Comments

முதன்முறையாக, ஜார்க்கண்ட் முதல்வர்(Jharkhand) ஹேமந்த் சோரன்(Hemant Soren) இந்த மாதம் சுவிஸ் ஸ்கை ரிசார்ட்(Swiss ski resort) நகரமான டாவோஸில்(Davos) நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின்(WEF) வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். மேலும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்த பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-24 திகதிகளில் நடைபெறும் டாவோஸ் கூட்டத்திற்குப் பிறகு, ஹேமந்த் சோரன் ஆக்ஸ்போர்டு(Oxford) பல்கலைக்கழகத்தின் பிளாவட்னிக் அரசுப் பள்ளியில் ஒரு சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தி அதைத் தொடர்ந்து கேள்வி பதில் அமர்வில் கலந்துகொள்வார் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் இந்தியர் ஒருவர் கைது

  • January 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின்(Britain) கோவென்ட்ரி(Coventry) நகரில் சிறுமிகளை இணையம் மூலம் பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குரீத் ஜீதேஷ் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்து ஒரு மாணவர் விடுதியில் வசித்து வந்துள்ளார். “நேற்று பல வயது குறைந்த சிறுமிகளை ஆன்லைனில் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ததற்காக இந்தியர் குரீத் ஜீதேஷ் கைது செய்யப்பட்டார்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவென்ட்ரி அதிகாரிகள் குரீத் ஜீதேஷ் மீதான குற்றச்சாட்டுகள் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

  • January 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை தாக்கும் கோரெட்டி (Goretti) புயல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும். ஸ்கில்லி (Scilly)  மற்றும் கார்ன்வால் (Cornwall) தீவுகள் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரவை அலுவலகம் முதல் எச்சரிக்கையை பிற்பகல் 3 மணியளவில் ஸ்கில்லி தீவுகளுக்கு அனுப்பியது, இரண்டாவது எச்சரிக்கையை மாலை 5 மணிக்கு கார்ன்வாலுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த புயலின்போது மரங்கள் முறிந்து […]

செய்தி விளையாட்டு

2025/26ம் ஆண்டின் ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

  • January 8, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், சிட்னி(Sydney) மைதானத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 97.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 384 ஓட்டங்களை பெற்றது. அதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரமிப்பித்த ஆஸ்திரேலிய அணி 133.5 ஓவர்களுக்கு 567 ஓட்டங்கள் குவித்தது. […]

ஐரோப்பா

சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில் ஆங்கிலக் கால்வாயில் பயணிக்கும் மற்றுமொரு ரஷ்ய கப்பல்!

  • January 8, 2026
  • 0 Comments

ரஷ்ய கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது மற்றுமொரு ரஷ்ய கப்பல் ஆங்கிலக் கால்வாயில் பயணித்து வருவதாக கூறப்படுகிறது. ‘டாவியன்’ (Tavian) என அழைக்கப்படும் குறித்த கப்பலுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்நிலையில் குறித்த கப்பலையும் அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக சர்வதேச கடற்பகுதியில் வெனிசுலாவில் இருந்து வெளியேறும்  கப்பல்கள் சிறைப்பிடிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்கமையவே மரினெரா (Marinera) கப்பல் கைப்பற்றப்பட்டது. குறித்த […]

உலகம் செய்தி

அலெப்போவில் சிரிய அரசு படைகள் மற்றும் SDF இடையேயான மோதல்கள் தீவிரம் – பேராபத்தில் பொதுமக்கள்

  • January 8, 2026
  • 0 Comments

அலெப்போவில் (Aleppo) உள்ள ஷேக் மக்சூத் (Sheikh Maqsoud) மற்றும் அஷ்ரஃபீஹ் (Ashrafieh) மாவட்டங்களில் சிரிய அரசாங்க படைகள் (Syrian government forces) பீரங்கி மற்றும் மோட்டார் குண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளன. அரசு செய்தி நிறுவனமான SANA (Syrian Arab News Agency) இதனை அறிவித்துள்ளது. அல்-மிடான் (Al-Midan) சுற்றுப்புறம் SDF (Syrian Democratic Forces) நிலைகளால்  இலக்கு வைக்கப்பட்டதாகவும், அந்த இடங்களில் பெரும்பாலான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலெப்போவில் (Aleppo) SDF தாக்குதல்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன்  […]

error: Content is protected !!