செய்தி பொழுதுபோக்கு

அஜித்தைச் சந்தித்த அனிருத்

  • January 11, 2026
  • 0 Comments

சர்வதேச கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித் குமார், தற்போது அபுதாபியில் நடைபெறும் 24H சீரிஸ் (24H Series Middle East Trophy) போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அங்கு அவரை இசையமைப்பாளர் அனிருத் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட, அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள அஜித்தின் 64-வது திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், […]

உலகம்

கிரீன்லாந்து விவகாரம் : டென்மார்க் – அமெரிக்க உறவில் விரிசல்!

  • January 11, 2026
  • 0 Comments

கிரீன்லாந்திற்கு எதிரான டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய அணுகுமுறை டென்மார்க் பிரதேசத்துடன் அமெரிக்கா கொண்டிருக்கும் தடையற்ற அணுகலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அமெரிக்காவின் முன்னணி நிபுணர் எச்சரித்துள்ளார். பராக் ஒபாமாவின் (Barack Obama) முன்னாள் உதவி வெளியுறவுச் செயலாளர் பிராங்க் ரோஸ் (Frank Rose) மேற்படி சமிக்ஞை செய்துள்ளார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து நிர்வாகத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய கடைசி அமெரிக்க அதிகாரி பிராங்க் ரோஸ் (Frank Rose) ஆவார். கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்பின் நிலைப்பாடு […]

இலங்கை செய்தி

அரசாங்கத்திற்கு பரத் அருள்சாமி எச்சரிக்கை

  • January 11, 2026
  • 0 Comments

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்புப் பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் எனத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பரத் அருள்சாமி வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட 50 இலட்சம் ரூபா வீடமைப்புத் திட்டத்தில் மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்திய வீடமைப்புத் திட்டம் என்பது லயன் அறைகளை ஒழிப்பதற்கான ஒரு நீண்டகாலத் திட்டம் என்றும், அதனை அரசாங்கத்தின் பேரிடர் நிவாரணக் கடமைகளுடன் இணைக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். பெருந்தோட்ட […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 20 ஆம் திகதியே கையளிப்பு: தாமதிக்கப்படுவது ஏன்?

  • January 11, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதியளவிலேயே கையளிக்கப்படலாம் என தெரியவருகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்று முன்தினம் 9 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP திட்டமிட்டிருந்தது. இதனையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தும் திரட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏனைய சில பாடங்களிலும் உள்ள சிக்கல்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு SJP தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என அறியமுடிகின்றது. எனவே, […]

உலகம்

அமெரிக்காவுடன் சேர கிரீன்லாந்து வாசிகளுக்கு வெகுமதி அளிக்க பரிசீலனை!

  • January 11, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமிப்பதற்கு எதிராக  அந்நாட்டில் வாழும்  பழங்குடி மக்கள், எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பலர் இரு நாடுகளிடமிருந்தும் சுதந்திரம் பெற விரும்புவதாகக் கூறியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிரீன்லாந்தை கைப்பற்றியே தீருவோம் என குறிப்பிட்டுள்ள நிலையில் அவ் மக்களின் கருத்துக்கள் வந்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்காவில் சேர ஒப்புக்கொள்ளும் கிரீன்லாந்துவாசிகளுக்கு $100,000 உதவித்தொகை வழங்கும் யோசனையும் பரிசிலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், கிரீன்லாந்துவாசிகள் தங்களுக்கு ஆர்வம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.  

உலகம் செய்தி

வெனிசுலாவை விட்டு உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கப் பிரஜைகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை

  • January 11, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் நிலவும் மிக மோசமான பாதுகாப்புச் சூழல் காரணமாக, அங்குள்ள அமெரிக்கப் பிரஜைகள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசாங்கம் புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜனவரி 10-ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், சர்வதேச விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெனிசுலாவின் பிரதான வீதிகளில் ‘கோலெக்டிவோஸ்’ (colectivos) எனப்படும் ஆயுதமேந்திய குழுக்கள் வீதித்தடைகளை ஏற்படுத்தி, அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் அமெரிக்க ஆதரவாளர்களைத் தேடி வருவதாகத் தூதரகம் […]

உலகம் செய்தி

நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர முடியுமா? நோபல் கமிட்டி விளக்கம்

  • January 11, 2026
  • 0 Comments

2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado), தனது பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை’ எனப் பாராட்டிய மச்சாடோ, இந்த வெற்றிக்காக ட்ரம்ப்புடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதற்குப் பதிலளித்துள்ள நோபல் […]

இலங்கை செய்தி

சீன வெளிவிவகார அமைச்சரின் கொழும்பு பயணம் குறித்து டெல்லி கழுகுப்பார்வை!

  • January 11, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது விஜயம் தொடர்பில் டெல்லி கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi இன்று மாலை அல்லது நாளை இலங்கை வருகின்றார். கொழும்பு வரும், சீன வெளிவிவகார அமைச்சர் , இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்பு நடத்துவார். இலங்கையில் சீனத் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய […]

இந்தியா

நாளை சி.ஐ.பியில் முன்னிலையாகிறார் விஜய்!

  • January 11, 2026
  • 0 Comments

கரூர் பெருந்துயர் சம்பவம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு Vijay, பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அவர் நாளை டெல்லி செல்கின்றார். சி.பி.ஐ. CBI விசாரணைக்காக நாளை (12) காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் விஜய் பயணமாகின்றார். முற்பகல் 11 மணியளவில் சி.ஐ.பி. அலுவலகத்தில் விஜய் முன்னிலையாவார் என தெரியவருகின்றது. அத்துடன், டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூரில் […]

ஐரோப்பா செய்தி

சிறார்களுக்கு சமூகவலைத்தளங்களில் கதவடைப்பு: ஆஸ்திரேலியாவின் வழியை பின்பற்றுகிறது பிரிட்டன்

  • January 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch) அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியா அண்மையில் அமுல்படுத்திய சட்டத்தைப் பின்பற்றி, சிறுவர்களின் மனநலம் மற்றும் கல்வியைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் கடுமையான வயதுச் சரிபார்ப்பு முறைகளைக் கையாள வேண்டியிருக்கும். அதேவேளை, பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கன்சர்வேடிவ் […]

error: Content is protected !!