இலங்கை

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் நாடாளுமன்ற ஊழியர்கள்!

  • November 2, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை  சமர்பிக்கும் காலத்தில் நாடாளுமன்ற ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிர்வாகத்தை மறுசீரமைப்பது தொடர்பான குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. மறுசீரமைப்பு குறித்த குழு அறிக்கை ஏற்கனவே நாடாளுமன்றத் துறைத் தலைவர்களுக்கு மேலும் கவனிப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கைக்கு ஊழியர்கள் கடும் […]

ஐரோப்பா செய்தி

ஏதென்ஸில் (Athens) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் டாக்ஸி ஓட்டுநர்கள்!

  • November 2, 2025
  • 0 Comments

ஏதென்ஸில் (Athens) உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் (Taxi Drivers)  48 மணிநேர பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ekathimerini இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பேருந்துப் பாதைகளில் இலவச அணுகலை வழங்கவும், ஏதென்ஸ் (Athens)  மற்றும் தெசலோனிகியில் (Thessaloniki) புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட அனைத்து டாக்சிகளும் ஜனவரி 1, 2026 முதல் 2035 இற்கு இடையில்  முழுமையாக மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்ற காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் […]

பொழுதுபோக்கு

பைசன் இதுவரை செய்துள்ள வசூல் விபரம் வெளியானது

  • November 2, 2025
  • 0 Comments

இயக்குநர் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் பைசன் காளமாடன். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் ஆகியோர் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். தீபாவளி ரோசில் குதித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில், இதுவரை பைசன் படம் உலகளவில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவுகளால் இனி வரும் நாட்களிலும் […]

ஐரோப்பா செய்தி

கிரீஸில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு!! தாக்குதல்தாரிகள் தப்பியோட்டம்!

  • November 2, 2025
  • 0 Comments

கிரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை (31.10) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் மையப்பகுதியில் உள்ள வோரிசியா (Vorizia) தெருவில் இந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.  தாக்குதல்தாரிகள் AK-47 தாக்குதல் துப்பாக்கிகளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது 39 வயது ஆணும் 56 வயதுடைய பெண்ணும் கொல்லப்பட்டதாக தி சன் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் தாரிகள் சம்பவ இடத்தில் […]

இலங்கை செய்தி

நுவரெலியா – சீதையம்மன் ஆலயத்தில் சீ.சீ.டி.வி கெமராக்களை உடைத்து கொள்ளை!

  • November 2, 2025
  • 0 Comments

நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் நேற்றிரவு இனம் தெரியாத நபர்களால் ஆலயத்தின் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் களவாடப்பட்டுள்ளதாக  ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கமராக்கள் உடைக்கப்பட்டு, இந்த கொள்ளை சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலயத்தின் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் ஆலயத்தின் உட் பகுதியில் பல்வேறு தேவைகள் நிமித்தமாக வைக்கப்பட்டிருந்த ஏழு உண்டியல்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாத நபர்கள் ஆலயத்திற்குள் பிரவேசித்து குறித்த உண்டியல்களை உடைத்து அதில் இருந்த […]

பொழுதுபோக்கு

பாலிவூட்டின் “கிங்” சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் இத்தனை கோடிகளா?

  • November 2, 2025
  • 0 Comments

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார். 50 வயதிலும் ஸ்மார்ட்டாகவும் ஃபிட்டாகவும் அழகாகவும் இருக்கும் இவர், இன்று வரை தனது கேரியலில் முன்னிலையில் இருக்கின்றார். பாலிவுட்டின் கிங் கான் என்று அழைக்கப்படும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உலகளவில் உள்ளனர். துபாயின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த முறை, மன்னத்தில் வீடு புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால், அவரது பிறந்தநாள் அலிபாக்கில் கொண்டாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

இலங்கை

எம்.பிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்த பின்னரே பாதுகாப்பு வழங்கப்படும்!

  • November 2, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்க  கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்த பிறகே அந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும்  என  காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீரசூரிய விளக்கமளித்துள்ளார். தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் துப்பாக்கிகளை வழங்குமாறு 20 எம்.பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு வெறுமனே கோரிக்கையின் பேரில் […]

உலகம்

நைஜீரியாவிற்கு துருப்புக்களை அனுப்ப தயாராகும் ட்ரம்ப் – அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

  • November 2, 2025
  • 0 Comments

நைஜீரியாவில் (Nigeria)இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒழிக்க இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தீவிரவாதக் குழுக்கள் நைஜீரியாவில் (Nigeria) கிறிஸ்தவர்களைக் கொன்று அவர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து வருகின்றன, ஆனால் நைஜீரிய (Nigeria)  அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று ட்ரம்ப் கூறினார். அமெரிக்க தாக்குதல்கள் விரைவாகவும் கடுமையாகவும் மாறுவதற்கு முன்பு நைஜீரிய (Nigeria)அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுப்பது நல்லது என்று டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் […]

உலகம் செய்தி

ஜமைக்காவில் (Jamaica) வீடுகளை இழந்து தவிப்போருக்காக நிதி திரட்டும் பிரித்தானியா!

  • November 2, 2025
  • 0 Comments

ஜமைக்காவில் (Jamaica) வீடுகளை இழந்து தவிப்போருக்காக பிரித்தானியா நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக மனிதாபிமான உதவிக்காக 2.5 மில்லியன்களை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் மேலதிகமாக £5  மில்லியன் வரை சேகரிக்க இலக்கு வைத்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புதிய நிதி, வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் மின்சாரம் இல்லாதவர்களுக்கும் உதவுவதற்காக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதேவேளை ஜமைக்காவை (Jamaica) தாக்கிய மெலிசா (Melissa) சூறாவளியால் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மெலிசா சூறாவளியால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. […]

உலகம் செய்தி

இருண்ட இடத்தில் அமெரிக்கா – சாடும் ஒபாமா!

  • November 2, 2025
  • 0 Comments

“நமது நாடும் நமது கொள்கையும் இப்போது மிகவும் இருண்ட இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விமர்சித்துள்ளார். வர்ஜீனியா (Virginia) மற்றும் நியூ ஜெர்சி (New Jersey) ஆகிய மாநிலங்களுக்கான ஆளுநர் வேட்பாளர் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எங்கிருந்து தொடங்குவது என்று தெரிந்து கொள்வது கடினம். ஏனென்றால் வெள்ளை மாளிகையானது ஒவ்வொரு நாளும்  பொறுப்பற்ற முறையில் […]

error: Content is protected !!