இலங்கை செய்தி

இலங்கையில் ஈரானிய கப்பல் பயணிகளுக்கு அடைக்கலம்: ஜனாதிபதிக்கு ரிஷாட் பாராட்டு

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் கப்பலில் இருந்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தின் மூலம் ‘மனிதாபிமானமே எதிலும் முதன்மையானது’ என்பதை – அவர் நிரூபித்துள்ளார் என்றும், இது – இலங்கையர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் தருணம் எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். ”மத்திய கிழக்கில் நடந்து கொண்டிருக்கும் யுத்தம் – […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகாலச்சட்டம் நீடிப்பு: சஜித் அணி போர்க்கொடி!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல J.C. Alawatthuwala தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இச்சட்டத்தை நீடிக்க வேண்டிய எவ்விதத் தேவைப்பாடும் நாட்டில் இல்லை. இது தொடர்பாக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. எனவே, அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதன் பின்னணியில் வேறு […]

உலகம்

ஈரான் உளவாளிகள் நால்வர் லண்டனில் கைது!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் உளவுத் துறையுடன் தொடர்பு வைத்துள்ளனர் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் லண்டனில் London கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானியர் ஒருவரும், பிரிட்டிஷ் மற்றும் ஈரான் குடியுரிமை கொண்ட மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள யூத சமூகத்தினர் மற்றும் அவர்களின் இருப்பிடங்களைக் இவர்கள் கண்காணித்து வந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக Watford மற்றும் Barnet உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே கைது இடம்பெற்றுள்ளது. […]

செய்தி

யாழ்.படகு விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு பணிப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் Ramalingam Chandrasekar இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, […]

உலகம்

போர் பதற்றத்தால் வழிபாட்டுத் தலங்கள் மூடல்!

  • March 6, 2026
  • 0 Comments

புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் (Al-Aqsa Mosque) இன்று (6) நடைபெறவிருந்த ஜும்மா தொழுகைக்கு இஸ்ரேலிய சிவில் நிர்வாகம் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்களைக் கருத்திற் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரிகேடியர் ஜெனரல் ஹிஷாம் இப்ராஹிம் (Hisham Ibrahim) தெரிவித்துள்ளார். இதேவேளை, அல்-அக்ஸா மசூதி மாத்திரமன்றி, பழைய ஜெருசலேம் நகரிலுள்ள மேற்கு சுவர் (Western Wall) மற்றும் திருக்கல்லறை […]

செய்தி

கடைசி குண்டு தீரும்வரை போராடுவோம்: ஈரான் பிரதி அமைச்சர் டெல்லியில் கருத்து!

  • March 6, 2026
  • 0 Comments

“கடைசி குண்டு தீரும்வரை, கடைசி வீரர் இருக்கும்வரை ஈரான் போராடும். அதைவிட வேறு வழியில்லை.” என்று ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் கத்தீப்சாதே Saeed Khatibzadeh தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், டெல்லியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். “ அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களை தாக்கி, ஆக்கிரமிப்பு நடத்தி வருகின்றன. ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த மேற்படி நாடுகள் முயற்சிக்கின்றன. எனது நாட்டின் குடிமக்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுகளை வீசி தாக்குதல்களை […]

உலகம்

எப்ஸ்டீன் விவகாரத்தை திசைத் திருப்பவே இந்த போர் நாடகம் : உலக தலைவர்கள் குற்றச்சாட்டு!

  • March 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கிய ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புக்களை மறைப்பதற்காக அல்லது திசைத்திருப்புவதற்காக நிகழ்த்தப்படும் ஒரு நாடகமே ஈரான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. நியூயார்க் ஜனநாயகக் கட்சி பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கோப்புகள் தொடர்பான விசாரணைகளை மழுங்கடிக்கும் ஒரு செயற்பாடே ஈரான் மீதான இந்த தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளின் நேரம் […]

உலகம்

லெபனானின் எல்லைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு வெளியேற்ற உத்தரவு!

  • March 6, 2026
  • 0 Comments

லெபனானின்  எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு ஹெஸ்பொல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வெளியேற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஹெஸ்பொல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை. ல்லைக் கோட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் நீங்கள் காலி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

ஈரானை அழிக்க அமெரிக்காவிற்கு நேசக்கரம் நீட்டும் உக்ரைன்!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரானின் ட்ரோன்களை அழிக்க அமெரிக்கா உக்ரைனின் உதவியை நாடியுள்ளது. மத்திய கிழக்கில் ஈரானிய ட்ரோன்களை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்காவிடமிருந்து ஆதரவு கோரிக்கையைப் பெற்றுள்ளதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை உக்ரைன் நிபுணர்களுடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். உக்ரைன் பல ஆண்டுகளாக ரஷ்ய தயாரிப்பான ஷாஹெட் ட்ரோன்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது, மேலும் “நமது பாதுகாப்பை உறுதிசெய்து நமது மக்களின் உயிரைப் பாதுகாக்க உதவும் கூட்டாளர்களுக்கு உக்ரைன் உதவுகிறது” என்று அவர் மேலும் கூறியுள்ளார். […]

உலகம்

ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல்! தொடரும் பதற்றம்!!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் லெபனான்மீதான வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கமைய தெஹ்ரானில் உள்ள முக்கிய அரசு கட்டமைப்புகள் மற்றும் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் குண்டு மழை பொழிந்துவருகின்றது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க படைகள் வரலாற்று சிறப்புமிக்க ஒருங்கிணைப்பை வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எதிரிகளின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்களை சிதைப்பதே தங்களின் முதல் கட்ட நோக்கம் என்றும் கூறியுள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்திவருகின்றது. […]

error: Content is protected !!