இலங்கை செய்தி

ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குளங்கள் பாதிப்பு! 

  • December 5, 2025
  • 0 Comments

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குளங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரியவருகின்றது. இலங்கை விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் நிர்வாகத்தின்கீழுள்ள ஆயிரத்து 160 சிறு குளங்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன. அநுராதபுரம் , வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறு குளங்களே அதிகளவு சேதமடைந்துள்ளன. இவற்றை புனரமைப்பதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குளங்களை இலங்கை விவசாய அபிவிருத்தித் திணைக்களம் பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த வெளிநாட்டுப் பெண்

  • December 5, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தான்சானிய நாட்டை சேர்ந்த 29 வயதான பெண்ணொருவர் இன்று குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் இன்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்து, மலேசியா, கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக விமான நிலைய போக்குவரத்து முனையத்தில் காத்திருந்தார். இதன்போது, பிரசவ வழி ஏற்பட்டதால் உடனடியாக விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்தியர்கள்  மற்றும்  தாதியர்களின் உதவியுடன் அவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். பின்னர் குறித்த பெண்ணும் குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக […]

இலங்கை

இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்த புயல்!

  • December 5, 2025
  • 0 Comments

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்துள்ளது. சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளளது. 341 பேர் காணாமல்போயுள்ளனர். 2 ஆயிரத்து 303 வீடுகள் முழமையாகவும், 52 ஆயிரத்து 489 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 51 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வெள்ளம் மற்றும் […]

இலங்கை

இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

  • December 5, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, 07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் 08 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு கடுமையான மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் […]

இலங்கை

ரயில் சேவைகள் நாத்தாண்டிய வரை நீடிப்பு

  • December 5, 2025
  • 0 Comments

கொச்சிக்கடைக்கும் நாத்தாண்டியாவிற்கும் இடையிலான ரயில் பாதையில் பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து புத்தளம் பாதையூடான ரயில் சேவைகள் இப்போது நாத்தாண்டியா வரை நீட்டிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இந்த தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில்கள் கொழும்பு கோட்டைக்கும் கொச்சிக்கடை ரயில் நிலையத்திற்கும் இடையில் மட்டுமே இயக்கப்பட்டன. பழுதுபார்க்கும் பணிகள் முடிந்தவுடன், கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டியாவிற்கு சேவைகள் முழுமையாகத் தொடங்கும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

தந்திரிமலைக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

  • December 5, 2025
  • 0 Comments

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று காலை 06.30 மணி நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள மற்ற ஆறுகளின் நீர்மட்டம் சாதாரண மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு களுத்துறை மாவட்டத்தின் பானதுகம பகுதியில் பதிவாகியுள்ளது, இது 120.8 மிமீ மழை வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது. இதனால் தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

ரயில் பருவக்கால சீட்டுக்களை பயன்படுத்தும் மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

  • December 5, 2025
  • 0 Comments

ரயில் பருவக்கால சீட்டுக்களைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிக்கலாம் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. டித்வா புயலினால் நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் தெரிவித்தார். எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ்களில் பயணிக்க ரயில் பருவக்கால சீட்டுக்கள் செல்லுபடியாகாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை

23 பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து! சாரதிக்கு அதிரடி தண்டனை

  • December 5, 2025
  • 0 Comments

மொனராகலை பகுதியில் கடந்த 27ஆம் திகதி பெய்த அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால், வெல்லவாய – கொழும்பு பிரதான வீதியின் கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியது. இதன்போது, 23 பயணிகளுடன் வெள்ள நீரோட்டத்தை பொருட்படுத்தாமல் சாரதி பேருந்தை செலுத்தியதில் பலரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருந்தது. எனினும், உடனடியாக செயற்பட்ட மீட்புக் குழுவினர் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டதுடன், பேருந்தையும் வெள்ளத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த நிலையில், கும்புக்கனை பகுதியில் வெள்ள […]

இலங்கை

வரவு – செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு இன்று

  • December 5, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு இன்று வெள்ளிக்கிழமை (5) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. எனினும் இந்த வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும், எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

தித்வா சூறாவளி – 800 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்!

  • December 5, 2025
  • 0 Comments

தித்வா சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 800ஐ நெருங்கியிருக்கும் என  மதிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 481 பேர் உயிரிழந்துள்ளதுடன், முந்நூறுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  மாயமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 800ஐ நெருங்கியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுக்கள் பல நாட்களாக துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உடல்களை மீட்டு வருகின்றனஇ அதே நேரத்தில் தற்காலிக தங்குமிடங்களில் உள்ள குடும்பங்கள் […]

error: Content is protected !!