இலங்கை செய்தி

மின்சார சபையை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இன்று முதல் அமுல்

  • March 9, 2026
  • 0 Comments

இலங்கை மின்சார சபையை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இன்று(09) முதல் அமுலுக்கு வருகின்றது. 2024 ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் குறிப்பிட்ட ஏற்பாடுகள் தவிர்ந்த ஏனைய ஏற்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை பொறுப்பளித்து 06 நிறுவனங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை குறிப்பிட்டு அண்மையில் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது. வர்த்தமானிக்கமைய மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அலுவலகங்களுக்கு செல்லும்  ஊழியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

  • March 9, 2026
  • 0 Comments

கொவிட் 19 இற்கு பிறகு, பிரித்தானியாவில் அலுவலகங்களுக்கு செல்லும்  ஊழியர்களின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ரெமிட் கன்சல்டிங் ஆலோசனை மற்றும் தரவுக் கண்காணிப்பு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, சராசரி அலுவலக வருகை கடந்த மாதங்களில் 40 முதல் 44 வீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலுவலக வருகை அதிகரித்தாலும், ஊழியர்கள்  வேலை செய்யும் சூழல் தரத்தை முக்கியமாக கருதுவதாகவுதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் நியமனம்

  • March 9, 2026
  • 0 Comments

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான  Gary Kirsten நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ICC ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு […]

செய்தி

பூசகர் வெட்டிக் கொலை: நயினாதீவில் பயங்கரம்!

  • March 9, 2026
  • 0 Comments

யாழ்.நயினாதீவல் Nainatheevu பூசகர் ஒருவர் வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பயங்கரச் சம்பவம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. தொழில் தொடர்பில் இரு பூசகர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு வாள் வெட்டுவரை சென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயேமற்றைய பூசாரி பலியானார் எனக் கூறப்படுகின்றது. இக்கொலைச் சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இலங்கை செய்தி

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல்

  • March 9, 2026
  • 0 Comments

கைதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்

இலங்கை செய்தி

எண்ணெய் விலை உயர்வை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர்

  • March 9, 2026
  • 0 Comments

உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கடந்த நெருக்கடி ஆண்டுகளை விட இலங்கை தற்போது சிறந்த நிலையில் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார் ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்புகள் அதிகரித்துள்ளதுடன், பணவீக்கம் தற்போது 1.6 சதவீதமாக காணப்படுவது பொருளாதாரத்திற்கு பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது எனவும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதால், பெட்ரோலிய விலை உயர்வு […]

ஆஸ்திரேலியா உலகம்

ஈரானிய கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்!

  • March 9, 2026
  • 0 Comments

ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த ஐந்து வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவில் Australia. தஞ்சம் asylum கோரியுள்ளனர் என தெரியவருகின்றது. 2026 மகளிர்  ஆசியக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுவருகின்றது. ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்டில் Gold Coast பிலிப்பைன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற குழு ஆட்டத்தில் ஈரான் அணி தோல்வி அடைந்தது. இதனால் உலகக்கிண்ண தொடரில் இருந்து அவ்வணி வெளியேறியது. ஐந்து வீராங்கணைகள் போட்டியில் தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால், அவர்கள் தாயகத்தில் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள […]

இலங்கை செய்தி

இஸ்ரேலுக்கு ஆதரவாக இலங்கையில் களமிறங்கிய தேரர்!

  • March 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இன்று (09) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பத்தரமுல்லே சீலரதன தேரர் தலைமையிலான Venerable Battaramulla Seelarathana Thero சிறு குழுவொன்றே இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் வந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி, போரில் மேற்படி நாடுகளுக்குரிய ஆதரவை வெளிப்படுத்தினர். இலங்கையில் நடந்தபோரின்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் வழங்கி ஆதரவை தாங்கள் மறக்கவில்லை என்றபோதிலும், இந்த போரில் இஸ்ரேல் […]

அரசியல் இலங்கை செய்தி

மின்சார சபையின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்: அபாய சங்கு ஊதுகிறார் சஜித்!

  • March 9, 2026
  • 0 Comments

“தேசிய நிறுவனங்கள் பாதுகாக்கப்படும் எனக்கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்று மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa குற்றஞ்சாட்டியுள்ளார். “ இலங்கையின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு ஜே.வி.பியின் JVP நிலைப்பாடாக அமைந்திருந்தது. ஆனால் இன்று அதற்கு மாறான செயல்பாடே இடம்பெறுகின்றது.” எனவும் அவர் கூறினார். “மின்சார சபை ஊழியர்களை வீதிகளுக்கு இறக்கி மின்சார சபையில் கைவைக்க விட […]

உலகம் செய்தி

ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் பாரிய தாக்குதல்

  • March 9, 2026
  • 0 Comments

ஈரானின் தலைநகர் தெஹ்ரான், இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் தெற்கு ஈரான் பகுதிகளை இலக்குவைத்து புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு பாரியளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு டெலிகிராம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதல்களின் விபரங்கள் குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!