மீள் கட்டமைப்பு நிதிக்கு ஹட்டன் நேஷனல் வங்கி பெருந்தொகை நிதி உதவி
இலங்கை மீள் கட்டமைப்பு நிதியகம் (Rebuilding Sri Lanka’) நிதியத்திற்கு ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National) வங்கி 100 மில்லியன் ரூபா நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘இலங்கை மீள் கட்டமைப்பு (Rebuilding Sri Lanka’) ’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து தொடர்ந்து நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில், ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National) 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியதுடன், அதற்கான காசோலையை ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National) யின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி சஞ்சய விஜேமான்ன ஆகியோர் இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.





