சூடானில் இருந்து வெளியேறிய 40 லட்சம் பேர் – அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்

சூடானில் இருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் 2023-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் இருந்து இந்த மக்கள் வெளியேறியுள்ளனர்.
அண்டை நாடான சாட் (Chad) நாட்டுக்கு மட்டும் 8 லட்சம் பேர் குடிபெயர்ந்துள்ளனர்.
ஆனால், நிதிப்பற்றாக்குறை காரணமாக போதுமான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் கிடைக்காமல் அகதிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மனிதகுலத்தின் மிகப்பெரிய நெருக்கடியை லட்சக்கணக்கான சூடான் அகதிகள் எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பின் அதிகாரி தெரிவித்தார்.
(Visited 7 times, 1 visits today)