இலங்கை செய்தி

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்!

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் மனிதப் புதைகுழியின் முதற்கட்ட அகழ்வுப் பணிகள், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி. பிரதீபன் முன்னிலையில் இன்று (30) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை ஊடாகக் காத்தான்குடிக்கு வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த முஸ்லிம் மக்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான நீண்டகால வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து இந்த அகழ்வுப் பணிக்கு உத்தரவிடப்பட்டது.

நீதிவான் ரி. பிரதீபனின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அகழ்வுப் பணியின் போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சட்டத்தரணி றாஸீ முஹம்மத் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், காணாமற்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை ஊழியர்கள், பாதுகாப்பு கடமைகளுக்காகப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் தத்தமது அன்புக்குரியவர்களின் எச்சங்கள் அடையாளம் காணப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் அகழ்வுப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!