உலகம் செய்தி

ஈரான்மீதான தடையை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

ஈரானில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை 2027 ஏப்ரல் 13 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையின் கீழ் 262 தனிநபர்கள் மற்றும் 53 அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.தனிநபர்களுக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் தொலைத்தொடர்பு கண்காணிப்பு சாதனங்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் தற்போது அனுமதிப்பதில்லை.

ஐரோப்பிய நிறுவனங்கள் அல்லது குடிமக்கள் இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு நிதி உதவி வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் இந்தத் தடைகள், ஒவ்வோர் ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஈரான் மீதான தனது பிடியை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இறுக்கியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!