SJB கொழும்பு மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்ன

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எரான் விக்ரமரத்ன போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கடுவெல மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குழுவின் கட்டுப்பணத்தை செலுத்த வந்தபோது, அவர் ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை தெரிவித்தார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர, கடுவெல தொகுதியின் அமைப்பாளர் என்றும், உள்ளூராட்சித் தேர்தலில் கடுவெலவில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)