தமிழ்நாடு

கோவையில் பிரபல பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் பத்ம சேஷாத்ரி பள்ளி(PSBB) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் வடவள்ளி பொலிஸார் பள்ளிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசாரும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்

இந்த தகவல் பரவிய நிலையில், பதற்றமடைந்த குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பள்ளி முன்பாக திரண்டு பதற்றத்துடன் குழந்தைகளை அழைத்து சென்றனர். மேலும் பள்ளி வாகனங்களில் வரும் குழந்தைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதே போல் சென்னை பள்ளியிலும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!