100 மில்லியன் இலக்குடன் முன்னணியில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையம்!
துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) கடந்த ஆண்டு 95.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து உலக அளவில் பரபரப்பான விமான நிலையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
இந்த ஈர்க்கக்கூடிய மைல்கல் துபாயின் நீடித்த பொருளாதார ஏற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. துபாய் கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளில் 05 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை DXB-யிலிருந்து வெளியேறும் மக்களின் முதன்மையான இடமாக 11.9 மில்லியன் பயணிகளுடன் இந்தியா உள்ளது. அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் உள்ளன.




