ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம் – அதிகரிக்கும் கட்டணம்

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் மற்றும் அதனுடன் இணைந்த குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆகியவை விமான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன.

இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்கள் 03 முதல் 3.5 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன.

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக குவாண்டாஸ் குழுமம் அறிவிக்கிறது.

எவ்வாறாயினும், இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட காலம் தொடர்பில் விமானப் பயணச்சீட்டு முகவர் மற்றும் பயண முகவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் அதிகளவான மக்கள் விடுமுறைக்கு செல்ல தயாராகி வரும் நிலையில் இந்த கட்டணங்களை அதிகரிப்பது நியாயமற்றது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!