உலகம்

புதிய சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ – 99 பிரம்படிகளா?

பிரபலக் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவருக்கு 99 பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்படலாம் என ஈரானிய ஊடகங்கள் சில தெரிவித்திருக்கின்றன.

ஏற்கெனவே காதலி இருக்கும்போது அவர் ஓவியர் பாத்திமா ஹமீமியை அணைத்து முத்தமிட்டதற்காக அந்தத் தண்டனை எனக் கூறப்படுகிறது.

ஆசிய சேம்பியன்ஸ் லீக் போட்டிக்காக ரொனால்டோ அல்-நாசர் அணியுடன் ஈரானியத் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றார்.

அப்போது ஹமீமி அவருக்கு இரு ஓவியங்களை அன்பளிப்பாக வழங்கினார். ஹமீமியின் உடல் 85 சதவீதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கால்களால் வரைபவர் என கூறப்படுகின்றது.

அன்பளிப்புகளுக்கு நன்றி கூறும் விதமாக ரொனால்டோ, ஹமீமியை அணைத்தார். அந்தக் காணொளியை அல்-நாசர் அணி தனது Instagram பக்கத்தில் பகிர்ந்தது.

எனினும் சில ஊடகங்கள், ஈரானில் ரொனால்டோவிற்கு 99 பிரம்படிகள் விதிக்கப்படலாம் என்பது பொய்த் தகவல் என்று கூறின.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்