உலகம்

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் மரண விவகாரத்தில் சர்ச்சை – ஆவணங்களில் ஏற்பட்ட குழப்பம்!

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ( Jeffrey Epstein) மரணத்தை அறிவிக்கும் ஒரு கூட்டாட்சி அறிக்கை புதிதாக வெளியிடப்பட்ட நீதித்துறை கோப்புகளில் வெளிவந்துள்ளது.

ஆனால் குறித்த அறிக்கை அவர் நியூயார்க் சிறை அறையில் இறந்து கிடந்த தருணத்திற்கு முந்தைய திகதியை கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட ஆவணம் 2019 ஆகஸ்ட் 9 என்ற திகதியை குறிக்கிறது. ஆனால் சிறைச்சாலை பதிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ கணக்குகள், ஆகஸ்ட் 10, 2019 காலை வரை எப்ஸ்டீன் பதிலளிக்காமல் இருப்பது கண்டறியப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

காலை உணவை வழங்கும் ஒரு அதிகாரியே அவரை முதலில் கண்டதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திகதி முரண்பாடு அவருடைய மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

66 வயதான எப்ஸ்டீன், ஜூலை 6, 2019 அன்று கைது செய்யப்பட்டதிலிருந்து மன்ஹாட்டன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கூட்டாட்சி வழக்கறிஞர்கள் அவர் மீது சிறார் பாலியல் கடத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A federal statement announcing Jeffrey Epstein¿s death has surfaced with a date of August 9, 2019 - one day before he was officially found dead

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!