இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அவர் கல்வி கற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இன்று மதியம் 12:30 மணயிளவில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கபட்டது

இதன்பொழுது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக தியாகதீபத்தின் தியாக வரலாற்று பேருரை முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடர் மாணவர்களால் ஏற்றப்பட்டது.

இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் , பல்கலைக்கழக மாணவர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.-

   

அத்துடன் தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது.

தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் பெற்றோரினால் பொதுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாளர்களும் பொது மக்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!