பொழுதுபோக்கு

நடிகர் வடிவேலு வீட்டில் நடந்த சோகம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நகைச்சுவை ஜாம்பவானான வடிவேலு தனது உடல்மொழி, நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர்களை வெடித்துச் சிரிக்க வைப்பார்.

எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், ஆல் டைம் பேவரைட் நகைச்சுவை நடிகர் என்றால் அது வடிவேலுதான்.

நகைச்சுவையில் கலக்கி வந்த வடிவேலு தான் ஒரு காமெடி நடிகர் மட்டுமில்லை, ஒரு குணசித்திர நடிகர் என்பதை மாமன்னன் படத்தில் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்து நிரூபித்து விட்டார்.

இந்த படத்தில் வடிவேலுவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நயமாக நடித்திருந்தார்.

மாமன்னன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சந்திரமுகி 2 பாகத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே சந்திரமுகி முதல் பாகத்தில் முருகேசனாக நடித்திருந்த வடிவேலு இரண்டாம் பாகத்திலும் கலக்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பியான ஜெகதீசன் இன்று காலமானார். அவருக்கு வயது 55. கல்லீரல் செயலிழந்ததன் காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தம்பியின் மரணத்தால் வடிவேலு உள்பட அவரது குடும்பத்தினரே சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

வடிவேலுவின் தம்பியான ஜெகதீசன், மலைக்கோவில் தீபம், காதல் அழிவதில்லை போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அண்ணன் மிகப்பெரிய நடிகராக இருந்த போதும் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்து வந்த ஜெகதீசன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

மூன்று சகோதர்கள் மற்றும் இரண்டு தங்கைகளுடன் பிறந்த வடிவேலு, சினிமாவில் தான் பிரபலமான பின் உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார்.

தம்பி ஜெகதீசனின் மறைவால் துயரத்தில் இருக்கும் வடிவேலுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

(Visited 26 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content