ஐரோப்பா செய்தி

இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியது – 21 பேர் மாயம்

மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.

3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர்.

வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்தாலியை நெருங்கியபோது சேதமடைந்து கடலில் மூழ்கியது.

கடலில் தத்தளித்த 7 பேர் கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர்.

ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்காக மத்திய தரைக்கடலை கடக்கும்போது கடந்தாண்டு 2,500 பேர் கடலில் மூழ்கி இறந்ததாகவும், நடப்பாண்டில் இதுவரை ஆயிரத்து 47 பேர் இறந்ததாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content