இலங்கை

மட்டக்களப்பு – தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் ; சிரமங்களுக்கு ஆளான நோயாளர்கள்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இன்று காலை இலங்கையில் உள்ள பத்து வைத்தியசாலைகளில் 72 தொழிற்சங்கள் இணைந்து 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

இதன்கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வைத்தியசாலையில் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.வைத்தியசாலையில் கடமையில் உள்ள பல்வேறு பிரிவினரும் நான்கு மணி நேரம் கடமைக்கு செல்லாமல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.இன்றைய தினம் தமது நியாயமான கோரிக்கைக்கு சாதகமான பதில்கள் வழங்காவிட்டால் நாளை முதல் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன்காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு சுகாதார அமைச்சும் அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் எனவும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த போராட்டங்கள் காரணமாக நீண்டதூரத்திலிருந்து கிளினிக் மற்றும் சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்கள் மருந்துகளைப்பெறுவதற்கு நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலையேற்பட்டது.தற்போது நோன்பு காலம் என்ற காரணத்தினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content