செய்தி விளையாட்டு

AUSvsIND – 3ம் நாள் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.

முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜெய்ஸ்வால், அடுத்த பந்திலும் பவுண்டரி அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில் சுப்மன் கில்லும் ஸ்லிப்பில் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஒரு முனையில் கே.எல்.ராகு. தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. ரிஷப் பண்ட்டும் (9 ரன்கள்) தாக்குப்படிக்கவில்லை.

ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. அடிக்கடி மழை குறுக்கிட்டதால் இன்றைய நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மழை பாதிப்பு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றைய நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. முடிவில் இந்திய அணி 17 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்துள்ளது.

கே.எல்.ராகுல் 33 ரன்களுடனும், கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, ஆஸ்திரேலியாவை விட 394 ரன்கள் பின் தங்கியுள்ளது. பாலோ ஆன் ஆவதை தவிர்க்கவே இந்திய அணிக்கு இன்னும் 194 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.

இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்தியா அணியின் விக்கெட்டை விரைவில் கைப்பற்றி சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலியா முயற்சிக்கும்.

அதே சமயம், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதால், போட்டியை டிரா நோக்கி கொண்டு செல்ல இந்திய அணி முயற்சிக்கும். இதனால் நாளை நடைபெறும் 4-வது நாள் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி