ஐரோப்பா

ஆஸ்திரியாவில் பாடசாலை மாணவர்கள் முகத்தை மூடி ஆடைகள் அணியத் தடை!

பாடசாலைகளில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதை ஆஸ்திரியா அரசாங்கம் தடை செய்துள்ளது.

இது பாலின சமத்துவத்திற்கான தெளிவான உறுதிப்பாட்டை” பிரதிபலிப்பதாக கூட்டணி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட சட்டம் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் ஹிஜாப் அல்லது பர்தா போன்ற பாரம்பரிய முஸ்லிம் ஆடைகள் அணிவதைத் தடை செய்கிறது.

இந்தத் தடை அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்.

மேற்படி சட்டத்திற்கு இணங்கத் தவறும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் பாடசாலைக்கு சமூகமளித்து விளக்கமளிக்க வேண்டும்.

மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறும்போது €800 (£700) வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதேபோன்ற கட்டுப்பாட்டை நீக்கியதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!