கைடக்க தொலைபேசி மூலம் புற்றுநோயை கண்டறிய ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர்கள் முயற்சி

சிட்னி மருத்துவமனையின் நிபுணர்கள் ஸ்மார்ட் கைடக்க தொலைபேசி பயன்படுத்தி கண் பரிசோதனை மூலம் தோல் புற்றுநோயின் அபாயத்தைக் கண்டறியும் திறன் கொண்ட சாதனத்தை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புற்றுநோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் கமரா போன்ற சாதனம் ஸ்மார்ட் கைடக்க தொலைபேசியுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் எடுக்கப்பட்ட கண்ணின் புகைப்படம் புற்றுநோயை சரிபார்க்க ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு அனுப்பப்படுகிறது.
இந்த முறை கணினி அடிப்படையிலான சோதனையைப் போல் பலனுள்ளதா என மருத்துவ நிபுணர்கள் சோதித்து வருகின்றனர்.
கண் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் இந்த புற்றுநோய், மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் வகை என்று கூறப்படுகிறது.
உலகில் மெலனோமா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16,800 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெலனோமா ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேரை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்று தெரியவந்துள்ளது.