ஆஸ்காரில் இருந்து கமல்ஹாசனுக்கு வந்த ஸ்பெஷல் அழைப்பு

ஆஸ்கார் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS), இந்திய நடிகர்களான ஆயுஷ்மான் குரானா மற்றும் கமல்ஹாசனை வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைத்துள்ளது.
அவர்களுடன் சேர்ந்து, சமீபத்திய ஆஸ்கார் விருது வென்ற கீரன் கல்கின் மற்றும் மிக்கி மேடிசனையும் இந்த மதிப்புமிக்க திரைப்பட அமைப்பு அழைத்துள்ளது.
ஆரியானா கிராண்டே, பெர்னாண்டா டோரஸ், செபாஸ்டியன் ஸ்டான் மற்றும் ஜெர்மி ஸ்ட்ராங் உள்ளிட்ட மொத்தம் 534 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆஸ்காரின் வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
கமல்ஹாசனைப் பொறுத்தவரை, அவர் இந்திய சினிமா துறையின் புகழ்பெற்ற நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். திரைப்படத் துறையில் 5 தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவர், இன்னும் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் கடைசியாக மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அனைத்து பிரபலங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அகாடமியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 11,120 ஆக உயரும், இதில் 10,143 வாக்களிக்கும் உறுப்பினர்கள் அடங்குவர்.
அழைக்கப்பட்ட நபர்கள் அகாடமியின் 19 கிளைகளில் ஒன்றில் சேருவார்கள், அல்லது துணை உறுப்பினர்களாக – தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்குவதை கௌரவிக்கும் உறுப்பினர் பிரிவில் இடம்பெறுவர். கிளைகளில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் கலைஞர் பிரதிநிதிகள் ஆஸ்கார் பிரிவுகளில் வாக்களிக்கவும், அகாடமி நிர்வாகத் தேர்தல்களில் போட்டியிடவும் தகுதியுடையவர்கள். துணை உறுப்பினர்களுக்கு ஆஸ்கார் வாக்களிக்கும் உரிமைகள் அல்லது நிர்வாகச் சலுகைகள் இல்லை.