இந்தியா

மக்களவைத் தேர்தல் : தமிழகத்தில் ஏப்.19 பொது விடுமுறை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் எதிர்வரும் ஏப். 19 ஆம் திகதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19 ஆம் திகதியன்று பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுவிடுமுறையை தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் இன்றுமுதல்(ஏப். 4) தபால் வாக்குப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர். சில மாவட்டங்களில் நாளை ஏப். 5 முதல் தபால் வாக்குகள் பெறும் பணியை தொடங்கவுள்ளனர்.

(Visited 22 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே