இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
(Visited 23 times, 1 visits today)