பொழுதுபோக்கு

33 வயதுதான் ஆகுது.. அனிருத்தின் சொத்து மதிப்பு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இப்போது நம்பர் 1 இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார்.

முக்கியமாக வை திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது.

அனிருத்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன.

ஒருகட்டத்தில் அனிருத் இசை இல்லாமல் படங்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. விஜய், ரஜினி போன்ற முன்னணி ஹீரோக்களே அனிருத்தின் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.

அனிருத்தின் இசையில் கடைசியாக ஜெயிலர், ஜவான் ஆகிய படங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி லியோ படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் அனிருத் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் பிறந்தநாள் ட்ரீட்டாக லியோ படத்தை அவர் கொடுக்கவும் இருக்கிறார். இந்த சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அனிருத்தின் சொத்து மதிப்பு தகவல் பலரையும் மலைக்க வைத்திருக்கிறது. அதாவது அவருக்கு மொத்தம் 50 கோடி ரூபாயிலிருந்து 60 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒரு படத்துக்கு அவர் பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் இந்த சம்பளம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கும் சம்பளத்தைவிட அதிகம் என்றும் ஒரு தகவல் உலாவுவது கவனிக்கத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்