இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மீது குற்றச்சாட்டு – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாடகை பணத்தை சரிவர கொடுக்கவில்லை என்று டுபாயில் உள்ள தம்பதி ஒன்லைன் மூலமாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பஷீலத்துல்ஜமீலா என்பவரின் வீட்டை கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார்.
20 லட்சம் ரூபாய் வாடகை நிலுகை பணத்தை திருப்பி செலுத்தாமல் வீட்டை காலி செய்து விட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)