பொழுதுபோக்கு

வடிவேலு பிறவிக்கலைஞர்; ஆனால் நல்ல மனிதர் கிடையாது

காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்து வெற்றிக் கண்டவர் நடிகர் வடிவேலு. சமீபகாலமாக இவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

குறிப்பாக போண்டாமணி, விஜயகாந்த் மறைவின்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேலுவின் இந்த செயல் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் பெஞ்சமின், வடிவேலு குறித்து பேசியுள்ளார்.

“நான் போண்டாமணி போன்ற பல நடிகர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்ததற்கு வடிவேலு தான் காரணம். வடிவேலு உண்மையில் பிறவிக்கலைஞர். ஆனால் அவர் நல்ல மனிதர் கிடையாது”.

“படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினாலும் அதுகுறித்து வடிவேலு எதுவும் கேட்கமாட்டார்.

நாங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு ரோட்டில் இருக்கும் போது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வடிவேலு கேரவனில் இருப்பார்”.

“கேப்டன் விஜயகாந்த் நடிகர்களின் வாழ்க்கையை புரிந்துகொண்ட அவர்களுக்கு உதவி செய்வார். யார் மனதும் நோகும்படிவிஜயகாந்த் பேசமாட்டார். அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்ப்பார்” என்று பெஞ்சமின் கூறியுள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!