பொழுதுபோக்கு

முதல் முறையாக வில்லன் ரோலில் நடிகர் நாகர்ஜுனா

கூலி படம் முடிவதற்கு முன்னே படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள். இந்த படத்தில் நடித்திருக்கும் பாலிவுட் ஜாம்பவான் அமீர் கான் பேட்டி கொடுத்து வருகிறார்.

அங்கே அவர் இந்த படத்தை பற்றிய சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் உடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அடுத்த ஒரு படத்தில் அவர் கூட நடிக்கவிருக்கிறார் அமீர்கான். இதை அவர் கொடிக்கும் பேட்டியில் அவரேகூறியுள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ், இயக்குனராக அவரை மிகவும் கவர்ந்து விட்டாராம். இதனால்தான் அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு எளிதில் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் மற்றும் கமலின் விக்ரம் இந்த இரண்டு படங்களையும் பார்த்து பிரமித்துள்ளார் அமீர்கான். இதையும் அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அதுவும் போக இந்த படத்தில் நாகார்ஜுனா, ரஜினிக்கு முதன்முதலாக வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

தான் நடித்த 90 படங்களில் இதுவரை எந்த ஒரு கதையிலும் அவர் வில்லனாக நடித்ததில்லை.முதன் முதலாக ரஜினிக்காகவும், லோகேஷ் காகவும் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வருகிறாராம். ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தையும், லோகேஷ் கனகராஜையும் கொண்டாடி வருகிறார்.

சொன்ன நேரத்தில் எங்கும் தடையில்லாமல் படத்தை அட்டவணை போட்டு பக்காவாக கொண்டு செல்கிறார் லோகேஷ். இதனாலே ரஜினிக்கு அவரை ரொம்ப பிடித்து விட்டதாம். இந்த படம் ஆரம்பித்ததில் இருந்து கடைசி வரை விசில் பறக்கும் எனவும் நாகார்ஜுனா தான் கொடுத்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்