இந்தியா செய்தி

துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண்

இந்தியாவின் பெங்களூரில் குளிர்சாதனப் பெட்டியில் இளம் பெண்ணொருவரின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டதுடன், மகாலட்சுமி என்ற 29 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, குறித்த பெண் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் அவரது உடலின் சுமார் 30 பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெண் குடியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசிப்பவர்கள் முறைப்பாடு செய்ததன் பேரில், பொலிஸார் வந்து வீட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

சோதனையின்போது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து இந்த பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொல்லப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உடற்பாகங்களில் புழு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!