யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூர்ந்து கறுப்பு கொடி!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்தநிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
(Visited 17 times, 1 visits today)





