பொழுதுபோக்கு

“என்னுடைய மறுபாதி நீ” ஒரே சகோதரியை இழந்து தவிக்கும் வாசுகி பாஸ்கரின் உருக்கமான பதிவு

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரம் அடுத்த லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள அவர்களது தோட்டத்தில் நடைபெற உள்ளது.

இளையராஜாவின் அண்ணன், தம்பி குடும்பத்தில் பவதாரிணி மற்றும் மறைந்த அண்ணன் ஆர்டி பாஸ்கர் மகள் வாசுகி பாஸ்கர் ஆகிய இருவர் மட்டுமே பெண் வாரிசுகள்.

தனது ஒரே சகோதரியைப் பறி கொடுத்த வாசுகி பாஸ்கர் நேற்று அழுத போது அவரை வெங்கட் பிரபு ஆறுதல் அளித்து அழைத்துக் கொண்ட காட்சியைப் பார்த்த பலருக்கும் பெரும் சோகமாக இருந்தது.

திரையுலகில் பிரபல ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் வாசுகி பாஸ்கர், பவதாரிணி குறித்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

அதில், “என்னுடைய மறுபாதி நீ, அதையும் என்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டாய். மற்றொரு பக்கத்தில் உன்னை பார்க்கிறேன். எனது ஒரே ஒரு சகோதரி. உன்னை நாங்கள் அனைவரும் மிகவும் மிஸ் செய்வோம். லவ் யு பவதா,” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்