ஐரோப்பா

பிரான்ஸில் விடுமுறையின் போது அமுலாகும் தடை

பிரான்ஸில் வாணவேடிக்கையின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 14ஆம் திகதி தேசிய விடுமுறையின்போது இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அன்று அவற்றை வழங்கவோ வைத்திருக்கவோ கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.

அங்குப் பதின்ம வயது இளையர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதால் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. அந்த ஆர்ப்பாட்டங்களில் வாணவேடிக்கைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

பொது ஒழுங்குமுறை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க ஜுலை 14ஆம் திகதியும் 15ஆம் திகதியும் வாணவேடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த இரு நாள்களும் பிரான்சின் தேசிய நாளாகக் (Bastille Day) கருதப்படுகின்றன.

தேசிய நாள் கொண்டாட்டங்களில் வாணவேடிக்கையை வழக்கம்போல் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!