பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி, பலர் வைத்தியசாலையில்!
பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
இதில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது மேற்படி குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் மற்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை, இருப்பினும் தாலிபான் அல்லது இஸ்லாமிய அரசு குழு போன்ற போராளிகள் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





