உலகம்

புற்றுநோய் பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள வெற்றி – நீண்டகால பாதிப்பில் இருந்து பாதுகாப்பு!

புற்றுநோய் பரிசோதனைகள் ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது ஏழு மடங்கு பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

புற்றுநோய்களைக் கண்டறிய  இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது வழமையான ஒரு நிகழ்வாகும்.

இதன்படி 25000 பேரை கொண்டு நடத்தப்பட்ட இரத்த பரிசோதனை நிகழ்வில்  62 சதவீத புற்றுநோய்கள் சரியாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“ஹோலி கிரெயில்” (Holy Grail) என்று அழைக்கப்படும் இந்த சோதனை, நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு முக்கியமாக இருக்கும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் தேசிய புற்றுநோய் திட்டத்தில் கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படும் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

அறிகுறிகள் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நோய் இருப்பதைக் குறிக்கும்  சிறிய அளவிலான கட்டிகள் இரத்தத்தில் இருப்பதை கண்டறிவதன் மூலம் நீண்டகால பாதிப்புகளை தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வில் கலந்துகொண்ட 133 பங்கேற்பாளர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 92 சதவீத வழக்குகளில், புற்றுநோய் எந்த உறுப்பில் ஏற்பட்டது என்பதை இலகுவாக கண்டறிய முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்