இலங்கை

ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி – பணத்தை இழந்த மக்கள்!

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிட்டத்தட்ட 200  மில்லியன் ரூபாய் மோசடி செய்த இருவர்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பல வருட அனுபவம் கொண்ட மாவனல்லையில் வசிக்கும் ஒருவரும், கம்பஹாவின் இம்புல்கொடவில் உள்ள  ஓய்வுபெற்ற இராணுவ கர்னலுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாளை (10) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமத்தை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நீர்கொழும்பு பகுதியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட  FC International என்ற நிறுவனமானது ஹங்கேரி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து அவர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக  செவிலியர் துறையில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்து பணம் வசூலித்துள்ளனர். பணம் வழங்கப்பட்ட போதிலும் வாக்குறுதியளித்தபடி வேலைவாய்ப்பை பெற்றுத்தரவில்லை என 20இற்கும் மேற்பட்டோர் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் ஹங்கேரிக்கு மட்டுமே வேலை உத்தரவுகளைப் பெற்றுள்ளதாகவும், ஆனால் செவிலியர் துறையில் வேலை வாய்ப்புகள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிதிக்கு பொறுப்பான மேலாளர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களைக் கைது செய்ய மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!