இலங்கை செய்தி

வாகன இறக்குமதி குறித்து ரவி கருணாநாயக்க கவலை

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டும் வகையில், வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து தேசிய ஜனநாயக முன்னணியின் (NDF) நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையாதவாறு கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ரூபாய் வீழ்ச்சியடைந்தால் அது நாட்டின் செலவினச் செலவுகளை அதிகரிக்கும்.

இது செலவு மிகுதி பணவீக்கத்தை ஏற்படுத்தும். இது நாட்டின் வரிச்சுமையை மோசமாக பாதிக்கும்.

மறுபுறம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சமாளிக்க வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும்.

இவை அனைத்தும் அரசின் செலவை மிஞ்சும்.

எனவே, ரூபா பெறுமதி வீழ்ச்சியை தடுக்கும் மற்றும் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் கொள்கையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

அதேநேரம், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முன் பதிவுக்கான அரசாங்கத்தின் திட்டத்தைப் பாராட்டிய அவர், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை நீண்ட காலத்திற்கு பதுக்கி வைக்க முடியாது என்பதால் இது ஒரு நல்ல பொறிமுறையாகும்.

வாகனங்களை இறக்குமதி செய்வதை தேசிய ஜனநாயக முன்னணி எதிர்க்கவில்லை என தெரிவித்த ரவி கருணாநாயக்க, வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கும் போது ரூபாயை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மாத்திரமே அவர்கள் முன்னிலைப்படுத்துவதாக தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!