பிரான்ஸில் சிறுவனால் 50 வயது நபருக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டு 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துலூஸ் எனும் பகுதியில் வசிக்கும் நபரே கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது அதில் தலையிட்ட மகளின் 15 வயதுடைய காதலன், அவரை கத்தியால் தாக்கியுள்ளான். இதில் கழுத்து வெட்டப்பட்டு தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
சம்பவ இடத்தில் இருந்து முதலில் தப்பி ஓடிய சிறுவன், பின்னர் நேற்று இரவு ஜொந்தாமினரிடம் சரணடைந்துள்ளார்.
(Visited 17 times, 1 visits today)