9 நகரங்களுக்கான விமான சேவைகள் இரத்து
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்புச் சூழல் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதைக் கருத்திற் கொண்டு, 09 முக்கிய நகரங்களுக்கான தனது விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக ஓமான் எயார் (Oman Air) நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் நாளை (09) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oman Air நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிவிப்பின்படி, மத்திய கிழக்கில் அம்மான், துபாய், பஹ்ரைன், தோஹா, தம்மாம், குவைத், பாக்தாத் ஆகிய நகரங்களுக்கும், ஐரோப்பாவில் கோபன்ஹேகனுக்கும் உள்நாட்டில் காசாப் நகருக்கும் இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.




