அல்பேனியாவில் உருவாக்கப்படவுள்ள 83 AI துணை அமைச்சர்கள்!
உலகின் முதல் AI அமைச்சர் தற்போது 83 AI அமைச்சர்களை பிரசுவிக்க உள்ளதாக அல்பேனிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பெர்லினில் (Berlin) பேசிய அல்பேனிய பிரதமர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டியாலா (Diella), விரைவில் 80க்கும் மேற்பட்ட AI குழந்தைகளைப் பெற்றெடுப்பார் என்றும், ஒவ்வொருவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு உதவுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பார்கள், என்றும் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு எதிர்வினையாற்றுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஊழலை எதிர்த்துப் போராடவும், ராமாவின் அமைச்சரவையில் வெளிப்படைத்தன்மை மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கவும் டியாலா (Diella) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)





