ஆப்பிரிக்கா செய்தி

கென்யாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 48 பேர் பலி

மேற்கு கென்யாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

கெரிச்சோ மற்றும் நகுரு நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கென்யாவின் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 19 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி