ஆசியா

ஆப்கானிஸ்தானில் பெய்த ஆலங்கட்டி மழை, திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 29 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களை ஆலங்கட்டி மழை, கனமழை, திடீர் வெள்ளம் வாட்டி வதைத்ததை அடுத்து, 29 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) தெரிவித்தனர்.

ஃபாரா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் ஆலங்கட்டி மழை, திடீர் வெள்ளம் காரணமாக 21 பேர் உயிரிழந்தாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் அந்த மாநிலத்தின் பேரிடர் நிர்வாகத்துறையின் தலைவர் திரு முகம்மது இஸ்‌ராயில் சயார் தெரிவித்தார்.

உயிரிழந்த அனைவரும் அப்பகுதியில் சுற்றுலா மேற்கொண்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.அவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

கந்தஹாரின் தெற்குப் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக எட்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.

துணி துவைத்துக்கொண்டிருந்த நான்கு பெண்களை வெள்ளம் அடித்துச் சென்றதாகவும் அவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கந்தஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மூன்று சிறுவர்களும் உயிரிழந்தனர்.அதே நகரில் சிறுவர் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!