25 நாட்களை கடந்து வசூல் வேட்டையாடும் தாய் கிழவி!
தாய் கிழவி திரைப்படம் வெளியான 25 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
இப்படம் வெளியானத்தில் இருந்து விமர்சண ரீதியில் பாராட்டுக்களை பெற்று வருகின்றது.
தற்போது, தாய் கிழவி திரைப்படம் வெளியான 25 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வசூலுடன் சேர்த்து இந்தப் படம் திரையரங்குகளில் 25 நாட்களை நிறைவு செய்துள்ளதையும் படக்குழு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.






