இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் பலி
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெருமளவானோர் இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மேற்படி காலப்பகுதிக்குள் நீரில் மூழ்கியவர்களில் 195 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 135 உள்நாட்டு பிரஜைகளும், 30 வெளிநாட்டு பிரஜைகளுமே இவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.
சிலாபம், தெதுரு ஓயாவிற்கு நீராடச்சென்றவர்களில் ஐவர் நேற்று நீரில் மூழ்கி பலியானார்கள்.
சிறார்கள் மற்றும் இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களென்பது தெரியவருகின்றது.
சுற்றுலா சென்றிருந்தவேளையிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, உலகளவில் நாளொன்றுக்கு நீரில் மூழ்கி 825 பேர்வரை பலியாகின்றனர்.
வருடாந்தம் 3 லட்சம் பேர்வரை நீரிழ் மூழ்கி உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.





