இலங்கை

விடுதலை செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள் : நாட்டை அடைத்தனர்.

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர் 22 பேர் இரண்டு நாட்டுப்படகுகளுடன் பாம்பன் துறைமுகம் சென்றடைந்தனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் நேற்று பகல் 2 மணியளவில் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரவு மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தி பின் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருந்த நேரத்தில், நேற்று இரவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீனவக் குடும்பங்களின் கோரிக்கை ஏற்று வெளியுறவு துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்ட நிலைமையை விளக்கிச் கூறியதாக கூறப்படுகிறது.

இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் நள்ளிரவில் 11.30 மணியளவில் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களையும் இரண்டு நாட்டுப்படகுடன் விடுவிக்க இலங்கை கடற்படை உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து மீனவர்களையும் படகுகளையும் சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

See also  இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

இதனை தொடர்ந்து சர்வதேச எல்லை கடலில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் 22 மீனவர்களையும் படகுகளுடன் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்ல கூறினர்.

பின் இன்று பகல் 1மணியளவில் பாம்பன் துறைமுகம் வந்தடைந்தனர். இவர்களை குடும்பத்தார் கண்ணீர் மல்க வரவேற்றனர் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் கூறும் பொழுது இரண்டு நாட்களாக கடலில் மழை திசை தெரியவில்லை

ஆகவே இலங்கை கடல் பகுதிக்குள் தெரியாமல் சென்று விட்டோம் என கூறினார். இதனை இலங்கை கடற்படையிடம் சொன்னோம் ஆனால் அவர்கள் கேட்கவில்லை ஆகவே எங்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென நள்ளிரவில் நீங்கள் எல்லாம் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள் உங்கள் அரசு விடுவிக்க சொல்லி இருக்கு என கூறியதால் மகிழ்ச்சி அடைந்தோம்,

அதன் பின் இலங்கை கடற்படை எங்களை பாதுகாப்போடு அழைத்து வந்து இந்திய கடலோரகாவல் படையிடம் ஒப்படைத்தனர். நாங்கள் வரும்பொழுது காற்று மழை காரணமாக காலதாமதம் ஆகி தற்போது தான் வந்து சேர்ந்தோம் எங்களையும் எங்கள் படகுகளை விடுவித்த இந்திய அரசுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content